Sunday, November 18, 2007

தமிழக காங்கிரஸா? சிங்கள காங்கிரஸா?

தமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...

1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொந்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... இந்த பண்ணையார் கோஷ்டிதான்...

2. கிருஷ்ணசாமி குருப் - இவரது கோஷ்டியில் இவரும் இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்... துனைக்கு மருமகன் அன்புமணி, பேமானி பேச்சு புகழ் மருத்துவர் ராமதாஸ்

3. இளங்கோவன் குருப் - இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள்...

4. குமரி அனந்தன் - இவர் தனிமரம்... இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்... அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்...

5. செல்லகுமார் - இவரும் தனிமரம்...

6. மணிசங்கரய்யர் - இவரது கோஷ்டியில் இவரும்... இவரது கைத்தடியான மாயவரம் எம்.எல்.ஏ.ராஜ்குமாரும்தான்... இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை... இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே... வேண்டியவர்கள் சிங்கள மக்கள்...

7. சிதம்பரம் - இவரது கோஷ்டியில் இவர்... இவரது ம்கன் கார்த்தி... கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்...

8. கிருஷ்ணசாமி வாண்டையார் - இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்... கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் - பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி - துனை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்...

9. வசந்தக்குமார் - இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்... பொருட்களுக்கு... தனிமரம்...

10. ஜெயந்தி நடராஜன் - தனிமரம்... காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்...

11. டி.யசோதா - திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. - சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்...

12. ஆர்.பிரபு - தனிமரம்... நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்...

13. பிட்டர் அல்போன்ஸ் - தனிமரம் - காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்... சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை... வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை... சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு... 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்... நிறைய அடிவாங்கியவர்.... காங்கிரஸ் என்றாலே வடிவேல் போல அடிவாங்குப்வர்கள் என நிரூபிப்பவர்...

14. வேலூர் ஞானசேகரன் - தனி மரம்...

15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் - சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்... கோஷ்டி தெரியவில்லை...

16. அன்பரசு - இவரது கோஷ்டியில் இவரும்... இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு... ஜெவின் உண்மை தொண்டர்... சிறப்பு தகுதி... சிங்களர்களிடம் இருந்து... விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி...

17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் - இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்... அவ்வப்போது தாவி கொண்டிருப்பார்...

18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி - முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்... தனி மரம்... அரசியல் விதவை...

19. சுதர்சன நாச்சியப்பன் - இவரும் தனி மரம்... தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்...

20. தங்கபாலு - 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி... அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி... கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி... முன்னாள் மாநில தலைவர்

21. ஜெயலலிதா - இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்... உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்... அன்பரசு போன்றவர்கள்... இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்... மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே...

ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்... மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்... திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல... எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்...

இப்போதைக்கு காங்கிரஸில் செல்வாக்கான தலைவர்கள்...

1. சிங்கள தலைவர் ராஜபக்சே...

2. ஜெயலலிதா...

3. மருத்துவர் ராமதாசு - கிருஷணசாமியின் சம்பந்தி என்பதால்...

மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதை... ஜெ காங்கிரஸ் கமிட்டி என்றோ... சிங்கள காங்கிரஸ் கமிட்டி என்றோ... ராஜபக்சே காங்கிரஸ் கமிட்டி என்றோ... கோத்தபயா காங்கிரஸ் கமிட்டி என்றோ மாற்றிக் கொண்டால்... அதன் செயல்பாடுகளுக்கு சரியாக இருக்கும்..

Monday, November 12, 2007

தமிழன் என்ன குற்ற இனமா?

1948இல் மத நல்லினக்கதிற்கு உண்ணா விரதம் இருந்த மகாத்மா காந்தியை... சாவர்க்கர் - கோட்சே... ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கூட்டம் கொலை செய்த போது... மதவெறி விஷ ஜந்து ஆர்.எஸ்.எஸ்.யை... 1948 இல் இந்திய அரசு தடை செய்ததது...

அப்போது தடை செய்யப் பட்ட இயக்கத்தில் வேலை செய்து... தலை மறைவாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயை... பின்னாளில் பிரதமர் ஆன போது... மானகெட்ட காங்கிரஸ்காரர்... ஆர்.எஸ்.எஸ். மயிரை கூட பிடுங்க முடியவில்லையே...

மானகெட்டவர்களே... உங்கள் மன்னிப்பை நீங்கள் ஏனடா ஏலம் விட வில்லை... காந்தியை கொலை செய்ததது பார்ப்பன கூட்டம் என்பதால்... மகாத்மா காந்தியை எளிதில் மறந்து விட்டார்களே... அடிமை ரத்தம் ஓடும்... காங்கிரஸ்காரர்கள்...

பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி... சீக்கிய தீவிரவாதிகள் மீதி நடவடிக்கை எடுத்த... 1984 இல்... இந்திரா படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட மான் என்ற காவல் பணி அதிகாரி... 1989 இல் மக்களவை உறுப்பினர் ஆன போது... சீக்கிய இயக்கங்களை... என்ன செய்தார்கள்... இந்த காங்கிரஸ்காரர்கள்... அந்த மான் என்கிற மக்களவை உறுப்பினர் 1989 இல் வாளோடு மக்களவைக்குள் செல்ல முடிந்ததே...

1987 இல்...ஜெயவர்த்தனேவுக்கும் சிங்கள பேரினவாததிற்கும் ஆதரவாக... அமைதிப் படை என்ற பெயரில் கற்பழிப்பு படையை அனுப்பிய போது... எவனாவது தமிழர்களின் கருத்தையோ... தமிழர்களின் வாழ்வுரிமை பற்றி சிந்திக்கவில்லையே... அங்கே சென்ற ராஜிவின் கற்பழிப்பு படை... ஈழ சகோதரிகளை மானபங்கப் படுத்தினீர்களே... கற்பழிப்பு படை செய்த கொடுமை... ஈழ தமிழர்களுக்கு எதிரான காட்டுமிராண்டிதனதிற்கு உடன்படாத காரணத்தால்... இந்திய ராணுவத்தில் இருந்த (மெட்ராஸ் ரெஜ்மெண்ட்) தமிழர்களையும் கொலை செய்தார்களே?

சொந்த மண்ணிலேயே மதகலவரம் செய்து மக்களை கொலை செய்த நரேந்திர மோடியின் மயிரை கூட பிடுங்க முடியாத காங்கிரஸ்காரர்கள்...

இப்போதும் மானகெட்டவர்கள் ராஜிவின் கொலையை மறக்க மாட்டோம்... மன்னிக்க மாட்டோம் என பேசும் போது...

ராஜிவ் அனுப்பிய கற்பழிப்பு படை செய்த குற்றங்களையும் கொலைகளையும் கணகிடுங்கள்.

அந்த கற்பழிப்பு படையின் குற்ற... கொலை கணக்குகளை நினைவில் வைத்து கொண்டு ராஜிவ் கொலையையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களே?

ஆனால் இந்தியா... சிங்கள பேரினவாதிற்கு ஆதராக செய்த அநீதிகளையும்... குற்றங்களையும் தமிழன் மறந்து விட்டான்...

தமிழன் என்ன குற்ற இனமா?

மகாத்மா காந்தியை கொன்ற பார்ப்பனர்களை மன்னித்து... காந்தியை மறந்து விட்டீர்களே?

இந்திராவை கொன்ற சீக்கியர்களை மன்னித்து... அவர்களோடு அமைதியாக போய் விட்டீர்களே...

ஆனால் தமிழனை குற்றம் சாட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்...

நாட்டின் தந்தையை கொன்றவர்களை கூட ஏற்று கொண்ட மானகெட்ட இந்தியாவே...

இனிமேலாவது சிங்கள பேரினவாததிற்கான... காட்டிமிராண்டிதனமான ஆதரவை... நிறுத்த மாட்டாயா?

ஈழ தமிழனுக்கு... இழப்பதற்கு உயிரை தவிர வேறொன்றும் இல்லை...

இந்திய ஆதிக்க வெறிக்கு... ஈழ தமிழனின் உயிரும் தேவையா?

இதற்கெல்லாம் காரணம்... தமிழக தமிழனுக்கு சூடு... சொரனை... மானமே இல்லையா?

இல்லாவிட்டால் சீக்கியனை பார்த்து தெரிந்து கொள்ளடா தமிழா... எப்படி... சூடு... மானத்தோடு இருக்க வேண்டும் என்று...

இனிமேலாவது ஈழ தமிழர்களுக்கு விடிய வேண்டும்....

Saturday, November 3, 2007

கலைஞர் இரங்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எப்போதும் சிரித்திடும் முகம் - எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோஇமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவியஉத்தம வாலிபன் -
உயிர் அணையான்உடன் பிறப்பணையான்தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா-
எங்கு சென்றாய்?

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஜெ தொலைகாட்சியில் தடை செய்யப் பட்ட விடுதலை புலிகள் இயக்கதிற்கு ஆதரவாக கவிதை எழுதிய கலைஞருக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது... இந்த இரங்கல் கலைஞர் பதவி ஏற்ற போது ஏற்று கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது எனவும் இந்திய அரசியல் சட்டதிற்கு எதிரானது எனவும்... காங்கிரஸ் அதிருப்தி எனவும் ஜெவின் தமிழர்களுக்கு எதிரான... பார்ப்பன... சிங்கள காட்டுமிராண்டிதனத்தின் அடிவருடிதன கோர முகத்தை காண முடிகிறது.

Friday, October 12, 2007

டி.ராஜேந்தர்

எனக்கு பிடித்த தன்னம்பிக்கை உள்ள மனிதர்களில் இவரும் ஒருவர்.
இந்த மனிதரை பற்றி எவ்வளவு கிண்டலடிக்க முடியுமோ அவ்வளவு கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை இவரை கிண்டலடிப்பவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே.

அஷ்டாவதானியாக பரிணாமித்துக் கொண்டிருக்கும் இவரின் திறமையை மதிப்பிடும் அளவிற்கு இவரைப் பற்றி தரக்குறைவாக எழுதுபவர்களுக்கு திறமை இருக்குமா? சந்தேகம் தான்.

டி.ஆர். உண்மையில் திறமைசாலி என்பதில் சந்தேகம் இல்லை...

அவரது படங்களுக்கு கதை-திரைகதை-வசனம்-பாடல்கள்-ஒளிபதிவு-இசை-இயக்கம் என எல்லா வேலைகளும் அவரே...

மேலும் மற்றவர்களை போல்... வேலையை வேறு ஒருவரை செய்ய விட்டு பெயரை போட்டு கொண்டவர் அல்ல...

அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை கடந்து வியதகு வெற்றிகளை பெற்றவர்...

பூம்புகாரில் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்...

மாயவரம் கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் தமிழ் முதுகலை பட்டம் படித்த போது... கணிதம் முதுகலை படித்த மாணவியை காதலித்தாராம்... அந்த பெண்ணும் ஏற்று கொண்டு... பெண் வீட்டில் பேசிய போது... இவன் கரடி போல் இருக்கிறான் இவனுக்கு பெண்ணை கொடுப்பது என அவமான படுத்தி... அவரது கல்லூரி காதல் தோல்வியாம்... இதையே காரணமாக காட்டி அவர் குடிகாரனாகவோ... வேறு கேவலமான வேலையை செய்திருக்கலாம்...

பின்னர் எந்த பின்னனியும் இல்லாமல்... கிட்டதட்ட இவரது கதையை மாற்றி... இவரது கதை-திரைகதை-வசனம்-பாடல்கள்-இசை மற்றும் ராபர்ட்-ராஜசேகர் ஒளிபதிவு-இயக்கத்தில் 1980 இல் வந்து பெரும் வெற்றி பெற்ற படம் ஒரு தலை ராகம்...

அந்த படம் வந்த பின்னரும் வாழ்க்கை போராட்டம்தான்... படத்தின் வெற்றிக்கு காராணம் ராபர்ட்-ராஜசேகர் என அறிய பட்டனர்...

ஆனால் டி.ஆர். சென்னை திருவெல்லிகேனி விடுதியில் தங்கி உணவுக்கு போராடிய காலம் அது...

அப்போது இ.எம்.இப்ராகிம் எனும் தயாரிப்பாளர் தஞ்சை சினி ஆர்ட்ஸ் எனும் பெரில் டி.ஆருக்கு இரயில் பயணங்க்ளில் படதிற்கு வாய்ப்பளித்தார்... இந்த படத்திற்கான மெட்டை தயாரிப்பாளுக்கு... திருவெல்லிகேனி உணவு விடுதியில் உள்ள பெஞ்சில் போட்டு காட்டினாராம் டி.ஆர். இந்த படம் 1981 இல் பெரும் வெற்றி பெற்ற படம்... கோவையில் 300 நாட்களுக்கு மேல் ஓடிய படம்...

1983 இல் இவரது உயிருள்ள வரை உஷா எனும் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படம்... அப்போது இவரை போல காதலில் தோல்வி அடைந்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்ட போது வைத்த பெயராம் இந்த படத்தின் பெயர்...

பின்னர் டி.ஆர். சமூக அக்கறை படம் எடுப்பதாக சொல்லி 1984 இல் வந்த படம் தங்கைகோர் கீதம்... இது வரதட்சனைக்கு எதிராக எடுத்த படம்... இதுவும் பெரிய வெற்றி பெற்ற படம்...

அடுத்து அவர் குடி பழக்கதிற்கு எதிராக எடுத்த படம் அவர் வாழ்க்கையில் மற்றொரு திருப்பு முனை... அந்த படத்தின் தயாரிப்பளார் அதிமுக காரர்... ஏதோ பண பிரச்சனை... எம்.ஜி.ஆர். வரை செல்ல... எம்.ஜி.ஆர். இந்த டி.ஆரை அழைத்து... தயாரிப்பாளருக்கு ஆதரவாக பேச... டி.ஆர். எம்.ஜி.ஆரை எதிர்த்து பேசினாராம்... தன்னை யார் எதிர்த்து பேசினாலும் ஏற்று கொள்ள முடியாத எம்.ஜி.ஆர். இந்த டி.ஆரை அடித்து அனுப்பினாராம்... அப்போது அவர் அடி வாங்கி கொண்டு ஓடிய இடம் கலைஞரின் வீடு...

அதன் பின் திமுகவில் சேர்ந்த டி.ஆர். எம்.ஜி.ஆரை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தவர்... பாளைய்கோட்டை சிறையினிலே... பாம்புகள் பல்லிகள் நடுவினிலே... அஞ்சாமல் நின்றவர் யாரு... அவர்தான் கலைஞர்... என திமுகவிற்கு பிரச்சார பாடல்கள் எழுதியவர்...

1985 இல் வந்த இவரது உறவை காத்த கிளி படம் பெரும் வெற்றி அடையா வில்லை... ஆனால் தோல்வி படம் இல்லை...

1986 இல் வந்த இவரது மைதிலி என்னை காதலி படம் பெறும் வெற்றி படம்...

1987 இல் வந்த இவரது ஒரு தாயின் சபதம்... பெரிய வெற்றி படம்...

1988 இல் வந்த இவரது என் தங்கை கல்யாணி படமும் பெரிய வெற்றி படம்...

பின்னர்தான் இவரது சரிவின் தொடக்கம்...

1989 தேர்தலில் திமுக சார்பில் பூம்புகாரில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது மறுக்க பட்டது... மேலும் விஜயகாந்திற்கு கட்சியில் இல்லாத போதும் கலைஞர் முக்கியதுவம் கொடுப்பதாகவும்... காரைகுடியில் போட்டியிட இராம நாரயணனுக்கு வாய்ப்பளித்ததும்... இவரது கோபத்தை கூட்ட... கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்தார்...

பின்னர் இவரது குடிகார தம்பி வாசுவிற்கு கலைஞர் மகளை திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்க போன போது... ஸ்டாலின் இவரை தாக்கியதாகவும் சொல்வார்கள்... மேலும் தஞ்சை பகுதியில் இருந்து வரவழைக்க பட்ட திமுக இளைஞர்கள் 1989 இல் இவரது வீட்டை தாக்கினார்களாம்...

1989 இல் தனி கட்சி தொடங்கிய இவர்... 1989 மத்தியில் நடந்த திண்டுக்கல் மக்களவை இடைதேர்தலில் இவரது மனைவி உஷாவை நிறுத்தி சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வாங்க வைத்தாராம்...

1989 இல் இவரது படம் தோல்வி... எனக்கு பெயர் மறந்து விட்டது... இப்போது பாலசந்தர் தொடர்களில் நடிக்கும் திருவரங்கம் ரேனுகா என்பவரின் முதல் படம் அது...

1991 இல் இவரும்... நடிகை ராதவும் வக்கிலாக நடித்து வந்த படமும் பெரும் தோல்வி...

1991 தேர்தலில் ஜெவை எதிர்த்து பர்கூரில் போட்டியிட்டு தோல்வியுற்றார்...

1992 இல் இவரது மகன் சிம்புவை வைத்து எடுத்த எங்க வீட்டு வேலன் பெரிய வெற்றியை பெற்றது...

1995 இல் வந்த இவரது படம் வந்து சுவடு தெரியாமல் பெட்டிக்குள் போனது... பெயர் மறந்து விட்டது...

1995 மே மாதம் மீண்டும் திமுகவில் இணைந்தார்...
1996 தேர்தலில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... பின்னர் அமைச்சர் பதவி கொடுக்க வில்லை என சொல்லி... அப்போது சில வாரங்கள் ராஜ் டிவி அரை மணி நேரம் அழுது விட்டு சென்றார்...

1999 இல் மும்தாஜை அறிமுக படுத்தி கொஞ்சம் ஆபாசமாக எடுத்த படம் சுமராக ஓடியது...

2000 த்தில் முரளியை வைத்து சொன்னால்தான் காதலா என எடுத்த படமும் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனது...

2001 தேர்தலில் பூங்கா நகரில் தோல்வி அடைந்தார்... மீண்டும் திமுகவில் இருந்து ஒதுங்கினார்...

2002 இல் அவர் மகன் சிம்புவை வைத்து ஒரு படம் எடுத்து மக்களை படுத்தினார்...

2005 ஜெவுடன் சேர்ந்து திமுகவை சாடி கொண்டு இருந்தார்...

2006 தேர்தலில் கூட்டனிக்காக ஜெவுடன் பேசிய முதல் தலைவரே இவர்தான்... பின்னர் ஜெ இவருக்கு நாமம் போட்ட பின் திமுக கூட்டனிக்கு ஆதரவாக பிரச்சாரம் என நகைசுவை செய்தார்...

அப்புறம்தான் வீராசாமி எடுத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தினார்...

இவரது திறமைகள்...

தன்னம்பிக்கை...

நேர்மையானவர்....

கடும் உழைப்பாளி...

ஒழுக்கமானவர்...

குறைகள்...

இவரது 80 கள் பாணியில் நல்ல படங்களாக எடுத்திருந்தால் கூட நன்றாக இருக்கும்... காலதிற்கு ஏற்றார் போல் எடுக்கிறேன் என சொல்லி புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதாகி விட்டது...

எதற்கெடுத்தாலும் அழுவார்... தங்கையாக அழுவதே இவரது உப தொழில்...

பொறுமை இல்லாதவர்.

சண்டை போட தயங்க மாட்டார்... உணர்ச்சி வச பட கூடியவர்...

மற்ற படி இவர் எஸ்.ஜே.சூர்யா... சங்கர்... போல சைகோதனம்... வக்ரம்... வன்முறை... ஆபாசம் இவற்றை கொண்டு பிழைப்பு நடத்துபவர் இல்லை...

Monday, October 1, 2007

தமிழ் நாடு வேலை நிறுத்தம்... உச்ச நீதி மன்றம்

இன்று தமிழ் நாட்டில் மானமுள்ள தமிழர்களின் ஆதரவோடு வேலை நிறுத்தம் சிறப்பாக நடந்ததது...

ஆங்கில தொலை காட்சிகள் தமிழ் நாட்டில் துக்கம் நடந்ததது போல் காட்டி கொண்டு இருந்ததன... உண்மைதான் ஊடங்களின் ஜாதி வெறிக்கு தமிழர்கள் கொடுத்த செருப்படிதான் இந்த அமைதியான வேலை நிறுத்தம்...

ஜெ தொலைகாட்சியில் 1 மணி வாக்கில் வந்த செய்தி... மன்னார்குடியில் வன்முறை போலிஸ் துப்பாக்கி சூடு... ஆனால் மன்னார்குடிக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது... அதெல்லாம் ஒன்றும் இல்லை எனவும் உண்ணா விரதம் அமைதியாக நடப்பதாகவும் சொன்னார்கள்... மேலும் அங்குள்ள சசிகலா உறவினர்கள் கலகம் செய்வதாகவும் சொன்னார்கள்... இந்த பொய் செய்தியை ஜெ தொலைகாட்சியும்... தினமலமும் பரப்புகின்றன...

பகல் 11 மணிக்கு ஆங்கில தொலைகாட்சிகள் ஆனந்தமாக ஒரு செய்தியை வெளியிட்டன... அதாவது... திமுக ஆட்சியை கலைக்க தயங்க கூடாது என உச்ச நீதி மன்றம் மத்திய அரசிற்கு ஆனையிட்டதாக வெளியிட்டன... கூடவே ஜெவின் வக்கில் ஜோதி... ஒரு நாமம் போட்ட சாமியாருடன் நின்று பேட்டியும் கொடுத்தார்...

1 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தாஸ் முன்ஷி திமுகவை ஆதரிப்பதாகவும்... உண்ணா விரதம் காந்திய வழி என அறிவித்ததை எந்த ஊடகமும் வெளியிட வில்லை... சன் செய்திகள் மட்டுதான் வெளியிட்டது...

இன்று வேலை நிறுத்தம் செய்ய உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு பிறகு யாரும் கட்டாய படுத்த வில்லை... தொழில் சங்ககளும்... மக்களும் விருப்பத்தின் பேரில் மேற்கொண்டதுதான் இந்த வேலை நிறுத்தம்...

இன்று மதவெறி சக்திகளுக்காகவும்... ஜெவுக்காகவும்
ஓலமிடும் உச்ச நீதிமன்றம்...

தமிழ் நாட்டிற்கு காவிரி நீரை விடாமல்... கர்நாடகா மீறிய போதும்...

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்... கேரளா மீறிய போதும்...

குஜராத்தில் மதவெறி பிடித்த ஓநாய் நரேந்திர மோடி... மத கலவரம் செய்து மக்களை கொலை செய்த போதும்...

மயிர் பிடுங்கி கொண்டா இருந்ததது...

மேலும் இன்று தீர்ப்பு வழங்கிய அமர்வு நீதிபதிகளில் ஒருவர்... சதாசிவம்...

1. இவர் மீது இருந்த குற்றசாட்டுகளுக்காக தாமதமாக 1 மாததிற்கு முன் தான் உச்ச நீதிமன்றதில் நீதிபதி ஆக்க பட்டார்..

2. அதிமுக காரர்...

3. முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமியின் சகலை...

4. முத்துசாமி எம்ஜிஆர் ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது... போக்குவரத்து துறைக்கு வக்கிலாக இருந்தவர்...

5. 1992 இல் ஜெ ஆட்சியில் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக்க பட்டவர்...

அதனால் இன்று வந்த தீர்ப்பு என்பது ஜெவே திமுகவுக்கு எதிராக எழுதிய தீர்ப்பாக கொள்ள வேண்டும்...

அரசியல் அமைப்பு சட்டம் தமிழ் நாட்டில் உடைந்து விட்டதாக ஒப்பாரி வைக்கும் உச்ச நீதிமன்ற முட்டாள்களுக்கு ஆதிக்க வெறிதான் மிஞ்சி உள்ளது...

தமிழக மக்கள் உச்ச நீதி மன்றத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பஜக... ஜெவுக்கு ஆதரவான ஆதிக்க வெறியர்களுக்கு அடிமை இல்லையே...மக்களுக்காக சட்டமே தவிர நீதிபதிகளுக்காக மக்கள் இல்லை...

நேற்று மதவெறிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் தமிழகத்தை அடிமைகளின் இடம் என நினைத்து ஆணையிட்ட போது... மானமுள்ள தமிழர்கள்... ஆணையை குப்பையில் வீசி விட்டுதான் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர்... இதுதான் உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஆதிக்க வெறியர்களுக்கு தமிழர்கள் கொடுத்த செருப்படி...

இதன் மூலம் உச்ச நீதி மன்றம் என்பது... பஜக... ஆர்.எஸ்.எஸ். ஜெ... போன்ற மத ஜாதி வெறியர்களின் அடிவருடிகள்... அடிமைகளின் கூடாரம் என தெள்ள தெளிவாக தெரிகிறது...

இதை எல்லாம் பார்த்து கொண்டு தலைமை நீதிபதியாக இருக்கும் நேர்மையான கே.ஜி.பாலகிருஷ்ணன் மவுன சாட்சியாக இருப்பது ஏன் என்று தெரிய வில்லை...


இறுதியாக சொன்னால் ஜாதி மத வெறி பிடித்த பொறுக்கிகள்... சதாசிவம் போன்ற ஆதிக்க சக்திகளின் அடிமைகள்... போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பபது... இந்த நாட்டின் சாப கேடு...

Saturday, August 25, 2007

காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் வாக்குமூலம். 1

நான் பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். இல் பணிபுடிந்தேன். பின் இந்து மகாசபையில் சேர்ந்தேன். இந்து கொடியின் ஒரு போர் வீரனாகச் செயல்பட நானாகவே முன்வந்தேன். இந்த நேரத்தில்தான் வீர சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவரது சுறாவளி பிரச்சாரம், காந்தமாகக் கவர்ந்திடும் தலைமையின் கீழ் முன் எப்போதையும் விட இந்து இயக்கம் பன்மடங்கு வளர்ச்சியும் வேகமும் பெற்றது. லட்சக்கணக்கான இந்து பெருமக்கள் இவரை தங்களது தள்பதியாக போற்றினர்.

இந்து மக்களுக்காகத் திறமையுடன், நம்பிக்கையுடனும் வாதாடக் கூடிய தலைவராக சாவர்க்கரை பார்த்தனர். இப்படிப் பட்டவர்களுல் நானும் ஒருவன். இந்து மகாசபையின் நடவடிக்கைகளை நான் பக்தி சிரத்தையுடன் மேற்கொண்டேன். இதனால் எனக்கு சாவர்க்கருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 'சாவர்க்கர் சதனில்' (சாவர்க்கரின் விடு) தரைத் தளத்தில் அமைந்திருந்த இந்து சங்காதன் அலுவலத்திற்கு அவ்வப்பொழுது சென்று வந்தது இதற்க்காகத்தான் என்பதை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

Tuesday, August 21, 2007

ஈழ தமிழர்களுக்கான உதவி...

சிங்கள பேரினவாத அரசு... ஈழத்திற்கு செல்லும் வழிகளை அடைத்த பின்... ஈழத்தில் உணவு தட்டுபாடு ஏற்பட்டு தமிழர்கள் சாக வேண்டும் எதிர்பார்க்கிறது...

இங்கே தமிழ நாட்டில் ஈழ தமிழர்களுக்கான... உணவு... மருந்து... உடை போன்ற உதவி பொருளகளை மக்களிடம் இருந்து பெற்று... சர்வ தேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க இந்திய அரசிடமும்... தமிழக அரசிடமும் அனுமதி கோரிய போது... அதற்கான அனுமதி வழங்க படவில்லை... ஒரு வேளை அனுமதி மறுக்க பட்டால்... நீதி மன்றம் சென்று சென்று அனுமதி பெற்று விட கூடாது என்பதற்காக காலம் கடத்துவதாக தெரிகிறது...

இப்போதைய நிலை... உதவி பொருட்களுடன்... நெடுமாறன் தலைமையிலான தமிழர் இயக்கம்... செப்டம்பர் 7 தேதி மதுரையில் இருந்து ஒரு பிரிவு இராமேஸ்வரம் சென்றும்... திருச்சிராய்பள்ளியில் இருந்து ஒரு பிரிவு... நாகப்பட்டினம் சென்று... செப்டம்பர் 11 ஆம் தேதி ஈழதிற்கு சென்று... நேரடியாக உதவிகளை வழங்குவதாக அறிவிக்க பட்டுள்ளது...

எனது சந்தேகம்...

1. சர்வதேச செஞ்சிலுவை சங்கம்... தீவிரவாத இயக்கம் இல்லை...

2. தமிழன் சாக வேண்டும் என சிங்கள பேரினவாதிகளும் அவர்கள் அடிவருடிகளான பார்ப்பனர்களும் விரும்பலாம்... ஆனால் ஆட்சியை காத்து கொள்ள கலைஞரும்... காங்கிரஸ் அடிமையாகி விட்டாரோ?

3. ஒரு முட்டாள் அரசியல்வாதி ராஜிவ் இறந்துவிட்டதால்... ஒட்டு மொத்த ஈழ தமிழினமே அழிய வேண்டுமா?

உங்களிடம் பதில் இருந்தால் சந்தேகங்களை தீர்க்கலாம்...

Tuesday, August 14, 2007

வெட்கம் கெட்ட 'சஷ்டியப்தபூர்த்தி' - விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...

இந்திய சுதந்திரத் தாய்க்கு இன்று 'சஷ்டியப்தபூர்த்தி' அதாவது அறுபதாம் கல்யாணம்!!!! இந்தியத் தந்தை....? ஒவ்வொரு இந்தியக்குடிமகனும்தான்.

இப்படி ஒரு பதிவை பார்க்க நேர்ந்ததது... என்ன கொடுமை சரவணன்...
இவர்கள் வாழ்த்து சொல்வதற்கு ஒரு விவஸ்த்தையே கிடையாது போல் உள்ளது...


இந்திய தாய்க்கு கல்யாணமாம்... அதுவும் 100 கோடி பேர் உடனாம்... இப்படிதான் ஏதாவது தொடர்பில்லாமல் எழுதுவார்களோ?

இந்த நாட்டை தாய் என்று சொல்பவர்கள்... நாட்டு தந்தை என அழைக்கப் பட்ட மகாத்மா காந்தியை 30-01- 1948 இலேயே மதவெறி பிடித்த சாவர்க்கர்... கோட்சே கூட்டம் கொன்று... இந்திய தாயை விதவை ஆக்கி விட்டார்களே? அப்புறம் என்ன தாய்... கல்யாணம் என வெட்கம் இல்லாமல் எழுதுவது...

எப்படி இருந்தாலும்

இந்தியாவின் 60வது விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...

இந்த நாளில் விடுதலைக்காக உரிரையும்... உடமைகளை நாட்டுக்கு அர்பணித்த தியாகிகள் நன்றியோடு நினைக்க பட வேண்டியவர்கள்...

Thursday, August 9, 2007

சுஜாதா... சங்கர் கூட்டனியின் தமிழர் மீதான் வக்ர தாக்குதல்...

வள்ளல் பாரி ஆட்சி செய்தி பகுதி... இப்போது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பிரான் மலை... அங்கே அந்த மலையில் அவர் கட்டிய சிவன் கோயில் இருக்கிறது...அந்த முல்லை கொடிக்கு தேடி... படர விட்ட... நிகழ்வு நடந்ததது... திருப்பத்தூர் எனும் ஊரில் என சொல்வார்கள்...

மூவேந்தர்களும் போரில் பாரியை தோற்க்கடிக்க முடியாமல்... புலவர் போல் வேடமணிந்து படையுடன் சென்று மூவேந்தர்களும்... அவனை கொன்றதாக வரலாறு உள்ளது...பின்னர்தான் பாரியின் பெண்களை கபிலர்... அழைத்து சென்று... தற்போது விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூருக்கு அருகில் உள்ள கபிலர் குன்றில் வைத்து வளர்த்தாக வரலாறு உண்டு...

வஞ்ச புகழ்ச்சி அணியில்... கபிலர்தான் பாரியை புகழ்ந்து பாடியிருப்பார்...

பாரி... பாரி என்று உருவேத்தி
ஒருவர் புகழ்வார் சென்னா புலவர்
பாரி ஒருவன் மட்டும்ல்லன்...
மாரியும்உண்டு இங்கு இவ்வுலகு புரப்பதுவே...

இதன் பொருள்... பாரி மழையை போல்... கொடையுள்ளம் கொண்டவன் என்பதுதான்... பாரி ஒருவன் மட்டும்தானா இருக்கிறான்... மழையும் இருக்கிறது என வஞ்சகமாக சொல்லி... அவன் மழையை போன்றவன் என்கிறார் கபிலர்...

பாரி... கடை ஏழு வள்ளல்களில் முதன்மையானவனின் மகள்கள்தான்... அங்கவை... சங்கவை...அங்கவை... சங்கவை...

சங்க தமிழ் பெயர்களை கேவல படுத்தியது தெரியாமல் நடந்ததது அல்ல...
சுஜாதா வயதான பின் இப்படியா ஜாதி வெறி பிடித்தலைய வேண்டும் என தெரிய வில்லை...

சங்கர் பெரிய ஜாதி வெறியன் என எல்லோரும் அறிந்த ஒன்றுதான்... அவன் படங்களில் எல்லாம்... வக்ரம்தான் மிஞ்சி இருக்கும்....

இந்த தமிழ் பெயர்களுக்கு பதில்... பாமா - ருக்மணி என்றோ ராதா - ருக்மணி என்றோ வைத்திருக்கலாமே? மாமா வேலை பார்க்கும் நடிகராக எஸ்.வி.சேகரையோ... சோ ராமசாமியையோ போட்டிருக்கலாமே? இவர்களுத்தான்... சங்கராசாரிகளுக்கு மாமா வேலை பார்த்த முன் அனுபவம் இருந்திருக்கும் அல்லவா?

அங்கவை... சங்கவை... யார் என்று தெரியாதவர் நடித்திருந்தாலும் பராவாயில்லை... தமிழ் பேராசிரியராக இருந்த டாக்டர் சாலமான் பாப்பையா வைத்தல்லவா தமிழர்களை கேவல படுத்தியுள்ளனர்... ஊடக விபசாரிகள் சங்கர் மற்றும் சுஜாதா... அப்படி இவர்கள் கருப்பானவர்களுக்கு உதாரணம் காட்ட விரும்பி இருந்தால்... இவர்கள் கடவுள்... கருப்பு ராமன் கருப்பான பெண்களை பெற்று கூட்டி கொடுப்பதாக காட்டியுருக்கலாமே?

ஆதிக்க வர்க்கத்தினர்... மேலும்... ஒரு முறை நிருபித்துள்ளனர்... தமிழனுக்கு சூடு சொரனை குறைவென்று....

Thursday, August 2, 2007

காவிரி நீர் பிரச்சனை...

காவிரி ஆறு தென்னிந்தியாவின் புனித நதியாக கருதப்படுகிறது. காவிரி மேற்கு தொடர்ச்சி மலையில் 1340 மீட்டர் உயரத்தில் இருந்து தோன்றி 800 கிலோ மீட்டர் பயணித்து காவிரி பூம்பட்டினத்தில் கடலோடு கலக்கிறது. காவிரியின் பாசன பகுதி 81,555 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 3.3 % கேரளாவிலும் 41.2 % கர்நாடகாவிலும் 55.5 % பகுதி தமிழ் நாட்டிலும் உள்ளது. காவிரி ஆறு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது, 1. மேற்கு தொடர்ச்சி மலை 2. கர்நாடகா, 3. தமிழ் நாடு டெல்டா.

ஒரு ஆண்டிற்கு காவிரி நீரின் தேவை 730 டிஎம்சி ஆகும். காவிரி ஆற்றின் நீர் பகிர்வு கர்நாடகா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களால் 1824 ஆம் ஆண்டு சென்னை மற்றும் மைசூர் மாகானங்களுக்கு இடையே ஏற்ப்பட்ட ஒப்பந்ததின் படி பயன் படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் 150 ஆன்டுகள் 1974 வரை அமலில் இருந்தது.

நீர் பாசன தேவைக்காக 1932 இல் கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் 1934 இல் தமிழ் நாட்டில் மேட்டூர் அணை திட்டங்கள் தொடங்கப்பட்டன.

காவிரி நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை நீர் பங்கீட்டில் பெரிய அளவில் பிரச்சனை எதுவும் எழ வில்லை. ஆனால் கர்நாடகா அரசு காவிரி நீர் ஒப்பந்தததை மீறி பல அணை திட்டங்களை நிறைவேற்றியது.

கபினி (1959)
ஸ்வர்ணாவதி (1965)
கேரங்கி (1964)
கேமாவதி (1968)

1824 நதி நீர் ஒப்பந்தத்தை மீறி மேற்க்கண்ட அணைகளை கர்நாடகா கட்டிய போது, தமிழ் நாட்டிலும், கர்நாடாகாவிலும், மத்திய அரசிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. காமராசர், பக்தவச்சலம் ஆகியோர் தமிழக முதல் அமைச்சர்க்ளாகவும், நிஜலிங்கப்பா கர்நாடகா முதல் அமைச்சராகவும், நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தனர். ஆனால் யாருமே கர்நாடகாவின் அத்து மீறலை கண்டு கொள்ள வில்லை.

1974 ஆம் ஆண்டு காவிரி நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆன போது தமிழக அரசு, ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சி செய்தது. ஆனால் கர்நாடகா காவிரி நதி நீர் ஒப்பத்தம் ஏற்ப்பட விரும்பவில்லை. இதனால் தமிழ் நாடு அரசு காவிரி நீர் பங்கீட்டிற்காக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டது. ஆனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்ப்பட தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் கர்நாடகா முதல்வர் தேவராஜ் உரூஸ் இருவரையும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் கூட கர்நாடகா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தரவில்லை.

1976 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டு, தமிழ் நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1976 ஆம் ஆண்டு மத்தியில் இந்திரா தலைமையிலான மத்திய அரசு காவிரி நீர் பங்கீட்டிற்க்கான கீழ்கண்டவாறு ஆணையிட்டது.

ஓர் ஆண்டிற்க்கான பகிர்வு.

கர்நாடகா - 239 - 261 டிஎம்சி
கேரளா - 39 - 43 டிஎம்சி
தமிழ் நாடு & புதுச்சேரி - 393 - 414 டிஎம்சி

காவிரியின் மொத்த பயன்பாடு 671 - 880 டிஎம்சி என கணக்கிடப்பட்டது.

ஆனால் கர்நாடகா இந்த மத்திய அரசின் காவிரி பங்கீடு ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை.

1977 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக அரசு அரசு பதிவியேற்றது.

பொது தேர்தலில் இந்திரா தலைமையிலான் காங்கிரஸ் அரசு தோற்கடிக்கப்பட்டு மொராஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசு பதவியேற்றது.

கர்நாடகாவில் தேவராஜ் உருஸ் காங்கிரஸை உடைத்து தனியாக ஆட்சியை தொடர்ந்தார். புதிதாக பதவிக்கு வந்த எம்ஜிஆர் காவிரி நீர் பிரச்சனையை மறக்கவே விரும்பினார், அவரது கொள்கைப்படி முந்தய திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.

இப்ப்டியாக மத்திய மாநில அரசுகள் காவிரி பிரச்சனையை கால்ப்பந்து விளையாடிய போது கர்நாடகா மேலும் ஒரு கோல் அடித்தது, அதாவது 1983 ஆம் ஆண்டு ஏகஞ்சி அணை திட்டத்தை நிறைவேற்றியது.

1982 இல் கர்நாடகாவில் ராமகிருஷ்ண கெட்டே தலைமையிம் ஜனதா அரசு அமைந்தது.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, ராஜிவ் காந்தி காங்கிரஸ் அரசின் பிரதமரானார்.

1987 டிசம்பர் இறுதியில் எம்ஜிஆர் இறந்த போது, வி.என்.ஜானகி அதிமுக அரசின் முதல்வர் ஆனார்.

1988 ஆம் ஆன்டு ஜனவரி 31 ஆம் தேதி வி.என்.ஜானகி தலைமையிலான் அதிமுக(ஜ) அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1988 அக்டோபர் மாதம் தொலைபேசி ஒட்டு கேட்ட பிரச்சனையில் ராமகிருஷ்ண கெக்டே பதவி விலகி எஸ்.ஆர்.பொம்மை கர்நாடகா ஜனதா அரசின் முதல்வர் ஆனார்.

1989 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

1989 ஏப்ரல் மாதம் தேவகவுடா தலைமையில் கர்நாடகாவில் ஜனதா கட்சி உடைந்து, எஸ்.ஆர்.பொம்மை ஆட்சி கவிழ்க்கப்பட்டது. குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1989 நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு, விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமையில் தேசிய முன்னனி அரசு அமைந்தது. கர்நாடகாவில் வீரேந்திர பாட்டில் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.

1990 அக்டோபரில் கர்நாடகாவில் வீரேந்திர பாட்டில் பதவி விலகி எஸ்.பங்காரப்பா காங்கிரஸ் அரசின் முதல்வர் ஆனார்.

1990 நவம்பரில் மத வெறியை தூண்டி பாபர் மசூதியை இடிக்க கிளம்பிய எல்.கே.அத்வானி பிகாரில் கைது செய்யப்பட்டதாலும், மண்டல் குழு அறிக்கை அமல் படுத்தப்பட்டதாலும், மத வெறி கொண்ட சமூக நீதிக்கு எதிரான் பஜக தேசிய முன்னனி அரசை கவிழ்த்தது. வி.பி.சிங் பதவி விலகினார். பின்னர் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து 54 எம்.பி.க்களை கொண்டு சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற பெயருடன் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி அமைத்தார்.

1991 ஜனவர் 30 ஆம் தேதி தமிழ் நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ஜெயலலிதா மற்றும் ராஜிவ் நிர்பந்தத்தால் கலைக்கப்பட்டு குடியரசு ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1991 மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சி, சந்திரசேகர் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திரசேகர் பதவி விலகினார்.

1991 ஜீன் மாதம் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி பி.வி.நரசிம்மராவ் தலைமையில் மத்திய அரசை அமைத்தது. தமிழ் நாட்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.

1992 நவம்பரில் கம்யூட்டர் வாங்கிய ஊழலில் பங்காரப்பா பதவி விலகி, கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு வீரப்ப மொய்லி முதல்வரானார்.

1994 நவம்பரில் நடந்த கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு, எச்.டி.தேவகவுடா தலைமையில் ஜனதா தள் அரசு அமைந்தது.

1996 மே மாதம் நடந்த பொது தேர்தலில் தமிழ் நாட்டில் ஜெயலலிதா அரசு தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

மத்திய அரசுக்கு எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் வாஜபாய் தலைமையில் சிறுபான்மை பஜக அரசு 13 நாட்கள் பதவியில் இருந்தது.

பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா தலைமையில் ஐக்கிய முன்னனி அரசு அமைந்தது.

கர்நாடகாவில் தேவகவுடாவிற்கு பின் ஜெ.எச்.பட்டேல் ஜனதா தள் அரசின் முதல்வரானார்.

1997 ஏப்ரல் தேவகவுடா பதவி விலகியதால் இந்திர குமார் குஜ்ரால் ஐக்கிய முன்னனி அரசின் பிரதமரானார்.

1997 நவம்பரில் காங்கிரஸ் ஐக்கிய முன்னனி அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டதால் குஜ்ரால் தலைமையிலான அரசு பதவி விலகியது.

1998 மார்ச் மாதம் நடந்த பொது தேர்தலில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் என்.டி.எ. அரசு அமைந்தது.

1999 மார்ச் மாதம் ஜெயலலிதா கலகம் செய்து வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை வில்க்கி கொண்டதால், வாஜ்பாய் தலைமையிலான என்.டி.எ. அரசு பதவி விலகியது.

1999 செப்டம்பரில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில் மீண்டும் என்.டி.எ. ஆட்சி அமைந்தது. கர்நாடகாவில் ஜனதா தள் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு, எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

2001 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.

2001 செப்டம்பர் மாதம் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தணடனை பெற்றிருந்ததால் உச்ச நீதி மன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாடு முதல்வரானார்.

2002 மார்ச்சில் நிதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழலுக்கான தண்டனைகளில் இருந்து விடுதலை பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழ் நாட்டின் முதல்வரானார்.

2004 மே மாதம் நடந்த பொது தேர்தலில் வாஜ்பாய் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய ஜன்நானயக கூட்டனி அரசு அமைந்தது.

கர்நாடகாவில் தரம் சிங் த்லைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.

2006 ஜனவரியில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டு எச்.டி.குமாரசாமி தலைமையில் ஜனதா தள்(கே) அரசு அமைந்தது.

2006 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் ஜெயல்லிதாவின் அதிமுக அரசு தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

மேலே குறிப்பிட்ட ஆட்சி மாற்றங்களாலும், கர்நாடகா அரசின் ஏமாற்று வேலைகளாலும், அரசியவாதிகளின் அலட்சியதாலும் காவிரி நீர் பிரச்சம்னைக்கு தீர்வு காணப்படவில்லை. ஆனால் கர்நாடகா மற்றும் தமிழ் நாடு அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை என் சொல்லிக் கொண்டு டெல்லி, சென்னை, பெங்களூர் என சுற்றுலா சென்று அனுபவித்துதான் மிஞ்சியது. கர்நாடகா தமிழ் நாட்டை ஏமாற்றுவதில் பல வழிகளையும் கையாண்டது.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முரசொலி மாறன் தலைமையிலான திமுக-கம்னிஸ்டு எம்.பி.க்கள் குழு தமிழகத்தின் சார்பில் பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க கோரியது. காங்கிரஸ் எம்.பி. வைஜெந்திமாலா பாலி இந்த தமிழக எம்.பி.க்கள் குழுவோடு பிரதமரை சந்தித்ததால் பின்னர் ஜெயலலிதாவால் பழிவாங்கப்பட்டார்.

கர்நாடகா அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசில் நீர்வள் துறை அமைச்சராக இருந்த மனுபாய் கொட்டாடியா அவர்களால் பம்பாய் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி சிட்டதோஷ் முக்ர்ஜி தலைமையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

வி.பி.சிங் அரசின் இந்த முடிவுதான் காவிரி நீர் பிரச்சனையின் தீர்வுக்கு மைல் கல் ஆகும். இப்பிரச்சனையை மிச சரியாக கையாண்ட நேர்மையான பிரதமர் வி.பி.சிங் ஆவார்.

1990 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையிலான நடுவர் மன்ற குழு கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்தது.

1991 ஆம் ஆண்டு ஜீன் 25 ஆம் தேதி நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையிலான நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என ஆணையிட்டது.

இடைக்கால தீர்ப்புக்கான புள்ளி விபரம் கீழ்வருமாறு:

மேட்டூர் அணைக்கு வந்த நீரின் அளவு.

ஆண்டு அளவு - டிஎம்சி
1980- 81 392.01 *
1981- 82 403.20 *
1982- 83 173.09
1983- 84 230.37
1984- 85 284.36
1985- 86 158.28 **
1986- 87 187.36
1987- 88 103.90 **
1988- 89 187.37
1989- 90 175.64

* - மிக அதிகமான் அளவு நீர் வரத்து
** - மிக குறைவான அளவு நீர் வரத்து

மிக அதிகமான மற்றும் குறைவான நீர் வரத்துள்ள ஆண்டுகளை கணக்கில் கொள்ளாமல், மற்ற ஆண்டுகளின் சராசரி நீர் வரத்தான 205 டிஎம்சி நீரை தமிழ் நாட்டிற்கு வழங்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடகா நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக அம்மாநில முதல்வர் பங்காரப்பா, அவருடைய சம்பந்தி நடிகர் ராஜ்குமார், கன்னட வெறியர் வாட்டல் நாகராஜ் மூவரும் கர்நாடகாவில் மாநிலம் தழுவிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை 6 மாதங்களுக்கு டிசம்பர் 1991 வரை கட்டவிழுத்து விட்டனர். மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான் காங்கிரஸ் அரசும் இந்த தமிழர்களுக்கு எதிரன வன்முறை வெறியாட்டங்களை மவுன சாட்சியாக ஆதரித்தது.

1992 ஆம் ஆண்டு மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் பல வகைகளில், டெல்லியில் அலுவலகம் கூட ஒதுக்காமல் அவமானப்படுத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற தலைவர் நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி, நடுவர் மன்றத்தில் இருந்து விலகினார்.

1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு பிரதமர் தலைமையில் காவிரி நீர் ஆணையம் அமைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு முயற்சி செய்தது. சில ஆண்டுகள் பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் அதிமுக தலைவி ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் தலைமையிலான ஆணையத்தை ஏற்றுக் கொள்ள முடியாது அறிவித்தார்.

2001 இல் இவர் முதல்வர் ஆன பிறகு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையத்தில் செயல்பாடு முடக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டிற்கு 419 டிஎம்சி, கர்நாடகவிற்கு 270 டிஎம்சி, புதுசேரிக்கு 6 டிஎம்சி நீரை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என ஆணையிட்டுள்ளது... மேலும் தமிழக எல்லையில் கண்கெடுக்க பட்டு கர்நாடகா 192 டிஎம்சி நீரை தமிழ் நாட்டிற்கு திறந்து விட வேண்டும் எனவும் ஆணையில் குறிபிட்டுள்ளது...

தமிழ் நாடு அரசு இந்த தீர்ப்பை ஏற்று கொள்வதாகவும் சில குறைகளை நீக்க உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது...

ஆனால் கர்நாடகா இந்த நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று கொள்ள முடியாது எனவும் தமிழகதிற்கு நீரை திறந்து விட முடியாது எனவும் அறிவித்துள்ளது...

இந்த நியாயமான தீர்ப்புக்கு... காராணமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் நீர்வள துறை அமைச்சர் மனுபாய் கொட்டாடியா... இருவரும் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டியவர்கள்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் எத்தனை ஆண்டுகள் ஊசலாடுமோ தெரிய வில்லை...

தமிழக காவிரி டெல்டாவின் நிலை:

20 ஆண்டுகளுக்கு முன் தமிழக டெல்டா விவசாயிகள் நெல் உற்பத்தியில் நாட்டிலேயே சிறந்து விளங்கினர். இப்போது டெல்டாவில் விவசாயதிற்கு போதிய நீர் இல்லை. விவசாய தொழிலாளர்கள் ஒரிரு வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர், வருவாய் தேடி நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.காவிரி மற்றும் துனை ஆறுகளில் சரியான நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீரும் குறைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையை வைத்துதான் விவசாயம் செய்ய வேன்டியுள்ளது.

தமிழ் நாட்டின் டெல்டா பகுதியில் விவசாய நில்பரப்பு குறைந்துள்ளது.கர்நாடகாவின் உண்மை நிலை:கர்நாடகாவில் உள்ள அணைகளில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும், அணைகளின் முழு கொள்ளவிற்கு தேவைக்கதிகமாக, அவசியமில்லாமல், பயன்படாமல் காவிரி நீர் தேக்கி வைக்கப்படுகிறது.தேக்கி வைக்கப்படும் நீரின் அளவிற்கு கர்நாடகாவில் நில்மும் இல்லை.காவிரியிலும் கர்நாடகாவில் காவிரி அணைகளிலும் வெள்ள அபாயம் வரும் போதுதான் உபரியான வெள்ள நீர் தமிழ் நாட்டிற்கு திறந்து விடப்படுகிறது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன?அரசியலும், அரசியல்வாதிகளும்தான்...

சுயநல அரசியவாதிகள் - தேவராஜ் உரூஸ், தேவகவுடா

ஏமாற்று பேர்வழிகள் & குறுக்கு புத்தி குணம் கொண்ட அரசியவாதிகள் - பங்காரப்பா, ஜெயலலிதா, நரசிம்மராவ்

நிர்வாக திறமையற்ற மக்களைப் பற்றிய கவலையற்ற அரசியவாதி - எம்.ஜி.ஆர்.

இது போன்ற சுகபோகங்களிலும், லஞ்சத்திலும் , பதவி வெறி பிடித்த நாற்காலி நாயகர்களிடம் தீர்வை எதிர்பார்க்க முடியுமா?தீர்வுதான் என்ன?

1. நாட்டில் உள்ள அனைத்து நதிகளும் தேசியமயகாக்கப்பட வேண்டும். குறைந்தது மாநிலங்களுகிடையே ஓடும் நதிகளாவது தேசிய மயமாக்கப்பட வேண்டும்.

2. மத்திய அரசு தேசிய நதி நீர் ஆணையம் அமைக்க வேண்டும். உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம் போல் சுதந்திரமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

3. அணைகளில் நீர் கட்டுப்பாடு பணிகள், தேக்குவது மற்றும் திற்ந்து விடுவது மத்திய மாநில் அரசுகள் சார்பற்ற நதி நீர் ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டும்.

4. மத்திய மாநில் அரசுகள் இந்த ஆணைய பணிகளில் தலையிடக் கூடாது.

5. அணு மின் நிலையங்களுக்கு இணையான பாதுகாப்பு, அணைகளுக்கு வழங்க வேண்டும்.

இவற்றை செய்தால்தான்... குறுக்கு புத்தியுடைய கொடூரமான ஜெயலலிதா, பங்காரப்பா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து நதிகளை காப்பற்ற முடியும்.

Thursday, July 26, 2007

இந்திய குடியரசு தலைவர்கள்...

இதுவரை இருந்த குடியரசு தலைவர்கள்...

இராஜேந்திர பிரசாத் (1952 - 62) - நல்ல முதல் குடியரசு தலைவர், சர்ச்சைகளில் சிக்காதவர், நேருவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தவர்...

டாக்டர் இராதகிருஷ்னன் (1962 - 67) - மிக சிறந்த கல்வியாளர், ரப்பர் ஸ்டாம்பாக செயல்படாதவர்...

ஜாகிர் உசேன் (1967 - 69) - நல்ல மனிதர், அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்... பதவிகாலத்தில் மறைந்தார்...

வி.வி.கிரி (1969 - 74) - முதன் முதலில் இவரால்தான் இப்பதவிக்கு அரசியல் புயல் அடித்தது... அதிகாரபூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை இந்திரா ஆதரவுடன் தோற்க்கடித்தார்... இந்திராவுக்கு ஆதரவாக செயல்பட்டார்...

பக்ருதீன் அலி (1974 - 76) - இவரால்தான் இப்பதவிக்கு ரப்பர் ஸ்டாம்ப் என பெயர் வந்தது என சொல்லாம்... இவர் காலத்தில்தான் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டது... பதவிகாலத்தில் மறைந்தார்...

நீலம் சஞ்சீவ ரெட்டி (1977 - 82) - ஜனதா ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்... சர்ச்சைகளுக்கு ஆளானவர்... 1977 இல் நிறைய காங்கிரஸ் மாநில அரசுகள் கலைக்க பட்டது... இவரைப் பற்றிய சென்னையில் நடந்த நகைச்சுவையான் செய்தி... 1979 இல் தமிழக ஆளுனராக இருந்த காந்தியவாதியான் பிரபுதாஸ் பட்வாரி ராஜ்பவனில் அசைவ உணவுகளுக்கு தடை விதித்து இருந்தார்... அப்போது சென்னை வந்த குடியரசு தலைவர் சஞ்சீவ ரெட்டியார் கோழிக் கறி கேட்ட போது ராஜ்பவனில் மறுக்கப் பட்டதாம்... உடனே ரெட்டியார் கோபித்துக் கொண்டு சென்னை தாஜ் விடுதியில் தங்கினாராம்...

ஜெயில் சிங் (1982 - 87) - நிறைய சர்ச்சைகளுக்கு ஆளானவர்... ராஜிவை நீக்கி அருன் நேருவை பிரதமராக்க முயற்சி செய்ததாக சொல்வார்கள்...

வெங்கெட்டராமன் (1987 - 92) - இந்த கேடு கெட்ட ராமனால்தான் இந்தப் பதவியே அசிங்கப் பட்டது... சிறந்த ஜால்ரா மன்னன், ஊழல் வாதி, துரோகி... எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதி வெறியன்... குடியரசு தலைவர் மாளிகையை கட்சி அலுவலகம் போல் நடத்தியவர்... இது போல் கேடு கெட்ட கேவலமான ஒன்று இந்த பதவிக்கு வரப் போவதில்லை...

டாக்டர் சங்கர் தயாள் சர்மா (1992 - 97) - பெரிய சர்ச்சைகளுக்கு ஆளாகமல் நாகரீகமாக இருந்தவர்... என்ன அடிக்கடி திருப்பதி கோயிலுக்கு வந்து... திருப்பதி கோயிலுக்கு வரும் மக்களுக்கு தொந்தரவு கொடுத்தார்...

கே.ஆர். நாராயணன் (1997 - 2002) - நீயாயமாக செயல் பட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்... ரப்பர் ஸ்டாம்ப் போல் நடந்து கொள்ளாதவர்... மரண தண்டனைக்கு எதிரான மனிதாபிமானி... நாகரீகமாக செயல்பட்டவர்...

2007 இல் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழர் டாக்டர் அப்துல் கலாம்... 1992 இல் ஓய்வு பெற்ற வெ.கெ.ராமன்...

இந்தியாவின் மிக உயரிய பதவியில் இருந்து... உலக தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடி தந்தவர் டாக்டர் அப்துல் கலாம்...

நேற்று சென்னை வந்த போது எந்த ஆடம்பரமுல் இல்லாமல்... அண்ணா பல்கலை கழக துனை வேந்தர்தான் வரவேற்று அழைத்து வந்தார்... பல்கலை கழகதிற்குதான் சென்றார்...னேற்று சென்னை வந்து... அண்ணா பல்கலை கழக விருந்தினர் மாளிகை தங்கியுள்ளார்... நேற்று இரவு முதல் நாளே... மின் வெட்டு காரணமாக இருட்டில் அவதி பட்டதாக செய்தி வந்துள்ளது... மிகவும் போற்றதக்க எளிமையான மனிதர்...

1992 இல் அதே பதவியில் இருந்து ஒரு ஊழலில் திளைத்து வந்த... கேடு கெட்ட... வெங்கெட்டராமனை பார்த்தீர்களேயானால்... 1992 இல் பதவியில் வந்த போது... ஜெ கூட்டம் கெட்டராமனுக்கு மிக பெரிய வரவேற்பு அளித்து... ராஜ்பவனில் கொட்டமடித்தது... ஜெ - கெட்டராமன் கூட்டம்... பின்னர் அந்த கேடு கெட்ட ராமனுக்கு... ஜெவின் கொள்ளை கூட்டம்... அரசு சார்பில் ஒரு பெரிய பங்களா வழங்கியது... சென்னையில் அந்த கேடு கெட்ட ராமனுக்கு இரண்டு வீடுகள் இருந்தும்... ஜெ கொள்ளை கூட்டம் கொடுத்த பங்களாவை வெட்டமில்லாமல் வாங்கி கொண்டு கூத்தடித்தது... கேடு கெட்ட ராமன் கூட்டம்... பின்னர் 1996 இல் திமுக அரசு வந்த பின் ஜெ கொள்ளை கூட்டம்... கெட்ட ராமனுக்கு சட்ட விரோதமாக தாரை வார்த்த பங்களாவை திருப்பி வாங்கியது... எதற்கும் வெட்கம் இல்லாத கேவலமான ஒரு பிறவிதான் கேடு கெட்ட வெங்கெட்டராமன்... (வெங்கெட்டராமன் பெயரை அருளியது சோ)...

மிக உயரிய பதவியில் இருந்து தமிழர்களுக்கு பெருமை தேடி தந்தவர் டாக்டர் அப்துல்கலாம்...

அதே உயரிய பதவியில் இருந்து தமிழ் நாட்டின் மானத்தை வாங்கியது கேடு கெட்ட வெங்கெட்டராமன்

Tuesday, July 10, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்

உடல்நிலை சரியில்லாமல் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்

1960 களில் நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸில் சோசலிஸ்டு பேரவை தொடங்கி அதில் நேருவை பங்கேற்ற வைத்தவர்...
பின்னர் மோகன் தாரியா, கிருஷண காந்த இவர் மூவரும் சேர்ந்து... கூட்டாக பணியாற்றி இளம் துருக்கியர்கள் என அழைத்து கொண்டார்கள்... ஆனால் பத்திரிக்கைகள் இவர்களை ஜிஞ்ஞர் குருப் என அழைத்தது...
1969 இல் காங்கிரஸில் இருந்து நிஜலிங்கப்பா, காமராசர், மொராஜி தேசாய் போன்றவர்கள் இந்திரா நீக்கிய போது... இந்திராவுக்கு பலமாக இருந்தவர் சந்திரசேகர்... அடுத்த 6 மாததிற்குள்... இவரும் இந்திராவால் காங்கிரஸில் இருந்து நீக்க பட்டார்...
பின்னர் ஜனதா கட்சி தொடங்கிய போது அதில் முக்கிய தலைவராக இருந்தார்...
1977 இல் ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது... பிரதமராக முயற்சி செய்தார்... ஆனால் எம்.பி. கள் ஏற்று கொள்ள வில்லை...அதனால் மொராஜி தேசாய் பிரதமரர் ஆனார்...
1979 இல் சரன்சிங் பிரிந்து லோக் தளம் தொடங்கிய பின்னரும்... வாஜ்பாய் பிரிந்து பாரதீய ஜனதா தொடங்கிய பின்னரும்... மீதமிருந்த ஜனதா கட்சிக்கு தலைவராக ஏற்று நடத்தியவர்...
1983 இல் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை பாத யாத்திரை சென்று மக்களிடம் பணம் வசூல் செய்தார்... அந்த பணத்தில் கரியானா மாநிலத்தில் மாதிரி கிராமம் உருவாக்கினார்... பின்னர் அந்த மாதிரி கிராமத்தை சொந்தமாக்கி கொண்டார்...
1980 - 84 கால கட்டத்தில் இந்திரா காந்திக்கு சிம்ம சொப்னமாக இருந்தார்...1987 இல் சரன் சிங் இறந்த பின் லோக தளம் கட்சியை ஜனதாவுடன் இணைத்தார்... பின்னர் ஜனதா தளம் ஆனது...
1989 இல் தேசிய முன்னனி வெற்றி பெற்ற போதும்... பிரதமராக முயற்சி செய்தார்... ஆனால்... இவரது முயற்சி... ராமாராவ், தேவிலால், ராமகிருஷண கெக்டே ஆகியோரால் தடுக்க பட்டு... வி.பி.சிங் பிரதமர் ஆனார்...
1990 நவம்பர் மாதம்... ஜனதா தளத்திள் இருந்து சுப்பிரமணிய சாமி உதவியுடன் 54 எம்.பி.களுடன் பிரிந்து... காங்கிரஸ் - ஜெயலலிதா ஆதரவுடன் பிரதமர் ஆனார்...கிட்ட தட்ட 120 நாட்கள் பிரதமராக இருந்தார்... பின்னர் ராஜிவ் ஆதரவை விலக்கி கொண்ட போது பதவி விலகினார்...
இந்தியாவில் பிரமராக இருந்தவர்களில் செங்கோட்டையில் கொடி ஏற்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது இவருக்குதான்...
பின்னர் நீண்ட காலம் உ.பி. பலியா தொகுதியில் இருந்து எம்.பி. யாக இருந்தார்...
இந்தியாவில் இருந்த போராட்ட குணம் மிகுந்த... ஒரு நல்ல தலைவராக விளங்கியவர்...

தமிழ் உணர்வுக்கு 85 வயது

1965 ஆம் ஆண்டு அப்போது நான் புலவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். திருவையாறு அரசர் கல்லூரி. தமிழ், வடமொழி இரண்டும் கற்பித்த கல்லூரி. வடமொழி பயில பேராசிரியர்கள் பெருமுயற்சி எடுத்து மாணவர்களைக் கூட்டி வருவர். எப்போதுமில்லாத அளவுக்கு தமிழ் படிக்க சில ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் வந்தனர்.
என் வகுப்பில் சுமார் 55 மாணவர்கள். அப்போதிருந்த கல்லூரி முதல்வருக்கு அதுவே மனவருத்தம். தமிழ் மாணவர்களுக்கு எப்போதும் பயமுறுத்தல்; இழிவான பேச்சு; அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்; 190 மாணவர்கள் மட்டுமே படித்த கல்லூரியில் 14 மாணவர்கள் வெள்யேற்றப்பட்டு சான்றிதழ்கள் பல்கலைக்கழக சிண்டிகேடுக்கு அனுப்பப்பட்டது.
தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தும் பலன் இல்லை. அப்போது தமிழ்நாடு முழுவதும் டெங்குசுரம் பரவி வந்தது, பேராசிரியர் க.அன்பழகனுக்கும் அந்தக் காய்ச்சல். அவரைச் சந்திக்க முடியவில்லை.நாகை தமிழ் புலவர் கோவை. இளஞ்சேரனும் நண்பர் வீர. கோவிந்தராசனும் பேராசிரியரைப் பார்க்க வருகின்றனர். சுரத்திலிருந்து மீண்டு அன்றுதான் தலை முழுகித் துவட்டிக் கொன்டிருந்தார். கோவை இளஞ்சேரன் 14 மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறார். அதைக் கேட்ட பேராசிரியர் உடனே எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு பேரறிஞர் அண்ணா அவர்களைச் சந்தித்து இச்செய்தியைக் கூறுகிறார். எப்படியும் அந்த மாணவர்களை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்று துடிதுடித்துக் கூறுகிறார்.அண்ணா அவர்கள் இரா. செழியன் அவர்களை அழைத்து துணைவேந்தரிடம் பேச அனுப்புகிறார். துணை வேந்தர் உடனடியாக அம்மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆணையிடுகிறார். பேராசிரியர் மாணவர்களுக்கு தகவல் தந்து தொடர்ந்து படிக்க உதவி செய்கிறார். 14 மாணவர்களையும் கரந்தைப் புலவர் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளச் சம்மதிக்கிறார் அக்கல்லூரி முதல்வர். மாணவர்கள் தொடர்ந்து படித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் தமிழாசிரியர்களாக பணியாற்றினர்.
அப்படிப் படித்து சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் நானும் ஒருவன். நண்பர் வீர. கோவிந்தராசன் மற்றும் மு. வெள்ளைச்சாமி மூவரும் தற்போது ஒய்வு பெற்று சென்னையில் வாழ்கிறோம்.எங்கோ பாதிப்புக்குள்ளான தமிழ் மாணவர்களுக்காக உடல் நலனையும் பொருட்படுத்தாது உடன் உதவி செத் தமிழ் உணர்வுக்கு உரியவர் பேராசியர் க. அன்பழகன். அவர் 85 வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அந்த இனமானக் காவலரின் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறோம்.
ஞானத்தேடல் சனவரி 2007 இதழில்... அதன் ஆசிரியர் நா.துர்க்காசெல்வம்.

Monday, July 9, 2007

தமிழ் வாழ்க...

தமிழ் வாழ்க...

Tuesday, July 3, 2007

தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்களுக்காக... திரு.வி,க.வின் படைப்புகளை பரப்புவதற்காக இந்த வலை பூ பயன்படும் என்ற நம்பிக்கையில்... இந்த எளியேன்... திரு.வி.க.வின் படைப்புகளை இனைய உலகத்தில் தெளிக்க தொடங்குகின்றேன்...