Saturday, November 12, 2011

க.சுப்பு... அவர்களுக்கு அஞ்சலி...



நான் அரசியலை பற்றி தெரிந்து கொண்ட சிறு வயது நிகழ்வுகளில் க.சுப்புவும் ஒருவர்... 1979 என நினைவு.... துக்ளக் பத்திரிக்கையில் அட்டையில் கேலி படத்தில் மூன்று பேர்... மேசை மீது நிற்பதாகவும் அவர்களில் ஒருவர் வேட்டி உருவபட்டு ஜட்டியோடு நிற்பதாக படம்... அந்த மூன்று பேரின் பெயர்கள் துரைமுருகன், ரகுமான்கான், மற்றும் க.சுப்பு... அதில் வேட்டி இல்லாதவரின் பெயர்தான் க.சுப்பு... அப்போது நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்தேன்... என் அண்ணன் நான்காவது படித்து கொண்டு இருந்தார்... அவர்தான் விளக்கினார்... இந்த மூன்று பேரும் திமுகவினர், இவர்கள் நிறைய கேள்வி கேட்கிறார்கள்... இவர்களுக்கு பதில் சொல்ல முடியாத எம்ஜிஆர் கட்சிகாரர்கள் இவர்கள் விரட்டுக்கிறார்கள்... க.சுப்புவின் வேட்டியை அவிழ்த்து விட்டார்கள் என்றார்... அதன் பிறகு மூன்றாவதில் இருந்து துக்ளக் படிக்க பழகினோம்... நிறைய அரசியல் செய்திகளை படித்தோம்... எனது அரசியல் ஆர்வதிற்கு க.சுப்புவின் வேட்டி அவிழ்ப்பு நிகழ்வும் ஒரு காரணாமாக இருந்தது... அதனால்தான் இந்த பதிவை எழுதி க.சுப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்...

க.சுப்பு... இராசபாளையத்தை சேர்ந்தவர்... இளங்கலை பட்டம் படித்தவர்... பின்னர் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி பெறாத... பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர்... கூடவே இந்திய பொதுவுடமை கட்சியில் இணைத்து கொண்டார்... தொழிற்சங்க தலைவரானார். 1971 தேர்தலில் இராசபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அந்த பகுதியில் இருந்த முதலாளிகளுக்கு பிரச்சனையாக இருந்தார்... அந்த முதலாளிகள் இவரை சென்னை பெயர்த்த பின்... திமுகவில் இணைத்து கொண்டார்... இவர் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் என்பதால் தொழிலாளர்கள் நிறைந்த வில்லிவாக்கம் தொகுதியில் 1977இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... அப்போது 1977,78,79 ஆண்டுகளில் தமிழ் நாடு சட்டமன்றத்தில் எம்ஜிஆர் கட்சிக்கு பெரும் பிரச்சனையாக இருந்தார்... அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை மழையாக பொழிவதாக திமுக தலைவர் புகழ்ந்தார்... 1980 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தோல்வி அடைந்தார்...

1982இல் திருசெந்தூர் கோயில் வேலை திருடி விட்டார்கள் என மதுரையில் இருந்து கருணாநிதி பாத யாத்திரை போராட்டம் நடத்திய போது அந்த போராட்டத்தில் கருணாநிதியோடு தீவிரமாக கலந்து கொண்டார்... பின்னர் ஜெ. கட்சியில் இருந்த போது கால்கள் அகற்றபட்ட போது கருணாநிதிக்காக இந்த கால்கள் நடந்தது... இப்போது கால்கள் இல்லாமல் போய் விட்டது என வருந்தி பத்திரிக்கையில் பேட்டியும் கொடுத்தார்...

1983இல் க.சுப்பு எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்தார்... 1984 தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் நாஞ்சில் மனோகரனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்...

எம்ஜிஆர் இறந்த பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்... அந்த நாதாரி பயல் ஒழிந்த பின் நடந்த 1991 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் 900 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வி அடைந்தார்...

ஒரு மனித உரிமை அமைப்பை தொடங்கினார்... கூடவே ஆர்.ஆர்.கோபாலுடன் சேர்ந்து தொடங்கிய பத்திரிக்கை நக்கீரனை பின்னர் கோபால் முழு பங்கையும் எடுத்து கொண்டார்... பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதா... அதிகாரத்திற்கு வந்த பின் முதன் முதலில் அஞ்சாமல்... 1991 சூலை மாதம்... இங்கேயும் ஒரு ஹிட்லர் என தொடர் எழுதினார்... இதனால் ஜெவின் அல்லகையாக இருந்த வாழபாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு நீக்கினார்... அதற்கும் பதிலாக வாழபாடி ஒரு நியமன தலைவர்... தானும் ஒரு நியமனம்... ஒரு நியமனம் எப்படி இன்னொரு நியமனத்தை நீக்க முடியும் என பஞ்ச் கொடுத்தார்... இதன் பின் க.சுப்பு பரபரப்பு அரசியலில் இருந்து அப்புறபடுத்தபட்டார்...

1996இல் மூப்ஸ் தமாக தொடங்கிய போது அதில் சேர்ந்து இருந்து விட்டு... 2001இல் ஜெ... கட்சியில் சேர்ந்தார்... பின்னர் நீரழிவு நோயினால் அவரது கால்கள் அகற்றபட்டன... கால்கள் அகற்றபட்ட போதும் ஆர்வமுடன் ஜெடிவியில் அரசியல் விவாதகளில் கலந்து கொண்டு கொஞ்சம் நாகரீகமாக பேசுவார்... மற்றபடி நாகரீகத்திற்கும் ஜெவுக்கோ அவர் டிவிக்கோ தொடர்பு இல்லையே? 2006 தேர்தலில் ஜெ... கட்சி தோல்வி அடைந்த போது ஜெடிவியில் தனி ஆளாக அரசியல் விவாதம் செய்தார்... 2006இல் ஜெ. கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகள் பற்றி வகுப்பு நடத்தினார்...

2007இல் கருணாநிதிக்கு நடந்த சட்டமன்ற பொன்விழாவிற்க்கு வாழ்த்து செய்தி வழங்கியதால்... ஜெ. கட்சியில் இருந்து விரட்டபட்டு... திமுகவில் சேர்ந்தார்... இறுதி வரை திமுகவில் இருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மறைந்தார்...

தமிழ் பேச்சை கொண்டு அரசியல் விபசாரியாக திரியும் நெல்லை கண்ணன் போன்ற பொறுக்கிகளை போல் அல்லாமல்... பல கட்சிகளில் இருந்தாலும் நாகரீகமாகவே செயல்பட்டார்...

க.சுப்பு பல கட்சிகளில் இருந்தாலும் அவருக்கு மரியாதை தந்தது பேச்சாற்றலும், பொதுவுடமை கொள்கை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள்... தொடக்கத்தில் நக்கல்பாரிகள் இயக்க தலைவர் ஏ.எம்.கோதண்டராமனுடன் தொடர்பு வைத்திருந்தார்... அந்த நட்பிற்காக நக்கல்பாரிகள் மீதான போலி என்கவுண்டர் கொலைகளை எதிர்க்க மனித உரிமை அமைப்பை தொடங்கினாராம்...

க.சுப்புவிற்கு ஆழ்ந்த அஞ்சலி...

Wednesday, August 31, 2011

கருணாநிதி... இந்த மானங்கெட்ட பொழப்புக்க்கு...

இதே கருணாநிதி 1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை ஈழத்திற்கு அனுப்பிய போது... அந்த சிங்கள பேரினவாதத்திற்கு ஏவல் செய்ய போகிறது என அம்ப்லபடுத்தி... நெடுமாறன், வீரமணி போன்றவர்களுடன் சேர்ந்து மனித சங்கிலி நடத்தினார்... அந்த கற்பழிப்பு படையில் ஆக்கிரமிப்பை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைக்க கேட்டவர்... 1990இல் ராஜிவ் அனுப்பிய படை கொலை... கற்பழிப்பு செய்தது என சொல்லி சென்னை துறைமுகத்திற்கு செல்ல மாட்டேன் என்றவர்... ராஜிவ் செத்த போது இவரைதான் கொலையாளி என ஜெயலலிதாவும், வாழபாடி ராமமூர்த்தியும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டனர்... இவரது கட்சிகாரர்கள் தெருவில் இழுத்து உதைக்கபட்டனர்... ஜெ... கட்சி மற்றும் காங்கிரஸ் ரவுடிகளால்... நளினியின் மரண தண்டனையை குறைத்த போது... குறைக்க கூடாது என்றவர் ஜெயலலிதா... 2006 தேர்தலில் ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணாநிதி கண்ணாம்மா எனும் படம் எடுத்து உதவி செய்தார் எனவும் பிரச்சாரம் செய்தார்... சுப.தமிழ் செல்வன் மறைவுக்கு கவிதை எழுதிய போது ஜெயலலிதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றார்...

இவ்வளவு நடந்த பின்னும்... குடும்பத்திற்காகவும்... குடும்பத்தினரின் சொத்து பணத்திற்காகவும்... கட்சியை காங்கிரஸ் பொறுக்கிகளுக்கு அடகு வைத்து இருக்கும் கருணாநிதி... இப்போது சோனியாவின் காலை மன்றாடி விடும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்...

ராஜாஜி, காமராசர், பெரியார், ஜெயபிரகாஷ் நாராயன், வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், கிருஷ்ணாகாந்த் போன்றவர்களுடன் அரசியல் செய்தவர் என பெருமையாக சொல்லி கொள்ளும் கருணாநிதிக்கு... பல நாடுகளுக்கு சென்று எதையும் ஒழுங்காக படிக்காத மடையன்... உலக பொறுக்கி ராகுலுடன் அரசியல் செய்வது இழிவாக தெரியாது... பணமும், பதவியும் படுத்தும் பாடு...

குடியரசு தினத்தில் அண்ணாவின் ஆணைகினங்க 1965 கருப்பு கொடி ஏற்றிய கட்சிகாரர் கருணாநிதி... இழிவான ஹிந்திய கொடியை ஏற்றும் வெறியில் இந்த ஆண்டு அண்ணா அறிவாலயத்தில்... கேடு கெட்ட ஹிந்திய கொடியை ஏற்றி அண்ணாவையும் இழிவுபடுத்தியுள்ளார்...

இப்போது அப்பாவிகளை கொலை செய்ய போகும் சோனியா-ராகுல் அரசின் முடிவை பற்றி கருணை மனு எழுதும் போது ராஜிவ் ஆவியை கூப்பிட்டு இருக்கிறார்...

ராஜிவ் ஆவி கூட என்ன சொல்லும்...

பதவி ஏற்றவுடன் 8500 சீக்கியர்களை கொலை செய்த ரத்த வெறியை தொடங்கிய ராஜிவுக்கு... அடுத்த மாதம் போபாலில் 15000 மக்களை கொலை செய்த ஆண்டர்சனை தனி விமானத்தை அனுப்பி அந்த கொலையிலும் பங்கெடுத்து கொண்ட ரத்த வெறிக்கு... அசாமில் போடோக்களை தூண்டிய ரத்த வெறிக்கு... ஈழத்தில் ஆயிரகணக்கான கொலை கற்பழிப்பு செய்த ராஜிவின் ரத்த வெறிக்கு... மாலதீவிற்கு ராணுவத்தை அனுப்பி கற்பழிப்பு கொலை நடத்திய ரத்த வெறிக்கு... இந்த 3 உயிர்களும் வேண்டும் என கேட்கத்தான் செய்யும்...

ராஜிவ் காந்தி போன்ற ரத்த காட்டேறியை துணைக்கு கூப்பிட்டு கருணாநிதி தன்னை தானே இழிவுபடுத்தி கொண்ட கேவலத்தைதான்... 65 ஆண்டு அரசியல் வாழ்வில் கற்று கொண்டதோ?

அண்ணா... அன்பழகன், நாஞ்சில் மனோகரன், செழியன், இராசாராம் போன்றவர்களை டெல்லிக்கு அனுப்பினார்... அவர்கள் கட்சிகாக வேலை செய்தனர்...

அண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்... டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு... மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி... மாறனுக்கு போட்டியாக வந்த டாக்டர் கலாநிதியை... வை.கோபாலசாமியை வளர்த்து ஒரம் கட்டி... வைகோ கைமீறி போன பின்... ஜெயலலிதா போலிசு கொடுத்த அறிக்கை கொண்டு வைகோவை கட்சியை விட்டு விரட்டி... மாறனுக்கு பிறகு தயாநிதியை டெல்லி அனுப்பிய... அந்த கேடி குடும்பத்திற்கும்... கட்சிக்கும் துரோகம் செய்தது கண்டு... கேடி தயாநிதியை கட்டம் கட்டி விட்டு... கனிமொழியை அனுப்பி... இப்போது ஆள் கிடைக்காமல் காங்கிரஸ் அயோக்கியர்கள் சிறை போட்ட பிறகு... சோனியாவின் பாதத்தை விடாமல் கட்டி கொண்டிருக்கும் கருணாநிதியின் மானங்கெட்ட பொழப்புக்கு...

மாறன் கருணாநிதிக்கு நேர்மையாக டெல்லியில் தூதர் வேலை பார்த்தார்... தயாநிதி சொந்த வியாபாரத்திற்கு கருணாநிதியை காட்டி கொடுத்த கேடி... கனிமொழி காங்கிரசிடம் மாட்டி கொண்ட கொண்ட பலி ஆடு... இப்போது காங்கிரசை கழட்டி விட்டால் கருணாநிதி குடும்பத்தை சோத்துக்கு வழியில்லால் யாரும் நிறுத்தி விட போவதில்லை... ஆனால் குடும்ப பாசமும், பதவி வெறியும்.. கருணாநிதியை காங்கிரசோடு சேர்த்து வைத்துள்ளது... இதுதான் கருணாநிதி 60 ஆண்டுகள் சேர்த்திருந்த மானமுள்ள தலைவர் எனும் நிலையை இடித்து விட்டது... தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு... மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறக்கும்... கருணாநிதி செய்யும்... இந்த மானங்கெட்ட பொழப்புக்கு...

Tuesday, March 29, 2011

இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்களின் இம்சைகள்...

கடந்த ஞாயிறு அன்று சேவ்-தமிழ் அமைப்பின் மகளிர் தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற போது... அங்கே படிக்கப்ப்ட்ட ஒரு கட்டுரையை பற்றி தோழர் ஒருவரிடம் கேட்ட போது... என்னை அறிவு அற்றவனாக எண்ணி... கீற்றில் கட்டுரை உள்ளது... போய் படித்து பார்க்க சொன்னார்...

கட்டுரையும் படித்தாகி விட்ட்து...

முகம் மறைத்தவளும்... சுயம் தொலைத்தவர்களும் எனும் அந்த கட்டுரை... விடுதலை புலிகளின் தோல்வியை... ஜெர்மனிய நாஜி படை... ரஷ்ய படைகளிடம் தோல்வி கண்டதை ஒப்பிடுகிறது... ஜெர்மனி ஹிட்லர் ஆதிக்க வெறியோடு நடத்திய ஆக்கிரமிப்புகள்தான் போரை தொடங்க காரணமாக இருந்தது... ஜெர்ம்னியின் ஆதிக்க வெறிக்கு எதிராக போரிட்ட செஞ்சேனைகள்... சிங்கள படைகளுக்கு நிகராக ஒப்பிடபட்டுள்ளது... புல்லரிக்குது...

முதலாளிதுவ ஆதரவு... மேற்கத்திய கட்டுரையை பரப்பும் இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்... அமெரிக்க ஆதரவு முதலாளிதுவ ஊடங்கள்... தினமும் ஒளிபரப்பி வரும் செய்திகள்... பிடலும்-சேவும் மக்களை கொலை செய்தார்கள்... பிரபாகரன் மக்களை கொலை செய்தார் போன்ற செய்திகளையும் நம்பதான் வேண்டி இருக்கலாம்... இவர்களின் முதலாளிதுவ மேற்கத்திய மோகம் அப்படியும் செய்ய வைக்கும்...

இது போன்ற மேற்கத்திய ஆதரவு கட்டுரைகளை கொண்டுதான் ஈழத்தை முட்டு கொடுக்க வைக்க முடியும்... கட்டுரையாளாரான இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர் நினைப்பார் என்றால் பாவம் ஈழம்... இருக்கிறது இணையம்.. கிடைக்கிறது மேடை என்பதற்காக கொள்கையில்லாமல்... கோவணமில்லாம் கட்டுரைகள் அரகேற்றபட்டால்... இது போன்ற மேடைகள்... பார்ப்பனர்கள் இடைவேளையில் தயிர் வடை சாப்பிடும் மார்கழி மாத சபாக்கள் போலவும்... எஸ்.வி.சேகர்-கிரேசி மோகன் டிராமாக்கள் போல் ஆகி விடும்...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றிய கட்டுரையை எழுத விரும்பியவர்... பாசிச ஹிட்லரின் ஜெர்மனிகாக அழுகிறார் பாவம்... ஈராகில் அமெரிக்க படைகள் நடத்தும் அக்கிரமங்களையும்... காஷ்மீரில் இந்திய படைகள் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் கொடுமைகளை காண முடியாமல்... கட்டுரையாளரின் கண்கள் குருடாகி விட்டதோ என்னவோ? முதலாளிதுவ ஆதரவு கண்கள் அப்படித்தான் இருக்குமோ?

இந்த கட்டுரையாளர் மற்றவர்களுக்கு 6 ஆலோசனை அல்லது 6 ஆணையிடுகிறார்... இந்த ஆறில் அவரது பங்களிப்பு என்னவோ? இப்படி தன்னை தலைவராக நினைத்து ஆலோசனை அல்லது ஆணை இட்டே... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விட முடியும் என நம்புகிறார் போலும்...

தமிழின அழிப்பு பற்றி இவரது இந்திய நிலை என்ன என்றோ இவரின் நிலை என்ன என்றோ சொல்லி விட்டு... உலகிற்கு ஆணையிடலாம்... கருணாநிதியை தோற்கடித்து விட்டு இவரை போன்ற இன்ஸ்டண்ட் ஈழ தாய் ஜெயலலிதா... அவரது அண்ணன் ராஜபக்சேவிடம் உரிமையோடு ஈழம் வாங்கி தருவார் என நம்புகிறாரோ?

சிங்கள அரசின் அவசர நிலை சட்டம் பற்றி பாடம் நடத்தும் போதே... ஹிந்திய அரசு காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கிறேன் என செய்யும் காட்டுமிராண்டிதனம் பற்றி கள்ள மவுனம் சாதிப்பாரோ?

சிங்கள அரசு தமிழர்களுக்கு உதவி செய்ய போராட வேண்டும் என்கிறார்... எங்கு சென்று?

இவர் ஆணையிட்டுதான் ஈழத்திற்கு சர்வதேச தொண்டு அமைப்புகள் செல்ல வேண்டும் நம்புகிறாரோ இந்த கட்டுரையாளர்... சர்வதேச அமைப்புகளை சிங்கள அரசுதான் வெளியேற்றியுள்ளது... அந்த அமைப்புகள் ஈழ பகுதிக்குள் அனுமதித்தாலே போதும்... இதற்கு கட்டுரையாளரின் ஹிந்திய அரசு எத்தனை ஆணிகளை பிடுங்கியது சொல்வாரா?

மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்திற்கு வழி தெரியாது போலும்... இனிமேல் கட்டுரையாளர்தான் மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்தின் வழிகாட்டி... ஷங்கரின் சிவாஜியில் ரஜினி பழகியது... பழக வைக்க போகிறார் போலும்...

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேவ்-தமிழ் நடத்திய நிகழ்வுகள் கலந்து கொண்ட வரையில்... இது போன்ற அரைகுறை கட்டுரையை கண்டதில்லை... இது போன்ற அரைகுறை அறிவிஜீவி கட்டுரைகள் சேவ்-தமிழ் அமைப்பின் நோக்கங்களை மாற்றி விடும்...