Monday, December 8, 2008

சிங்கள படைகள் முன்னேற்றம்...

கடந்த ஆறு மாதங்களாக... தமிழ் நாட்டில் வெளிவரும் தி பொந்து... மற்றும் தினமலம் பத்திரிக்கைகளில்... தினமும் சிங்கள படைகள் சில கிலோ மீட்டர் முன்னேறுவதாக செய்தி வெளியாக வருகிறது...

கடந்த வாரம் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த போது கூட தினமலம்... சிங்கள் படைகள் 5 கி.மீ. முன்னேறி விட்டதாக எழுதி இருந்தது...

இரண்டு மாதங்களுக்கு முன்னே சிங்கள படைகள் கிளிநொச்சிக்கு 7 கி.மீ. தொலைவில் மட்டும் இருப்பதாகவும்... 12 மணி நேரத்தில் பிடித்து விடுவார்கள் எனவும் எழுதினார்கள்... அதை வைத்து என் நண்பர் ஒருவர் கூட என்னிடம் சிங்கள படைகள் வெற்றி அடைவதாக பேசினார்...

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பத்திரிக்கைகள் எழுதும் கி.மீ. கணக்கை வைத்து பார்க்கும் போது சிங்கள படையின் ஒரு பிரிவு தலை மன்னாரை கடந்து ராமேசுவரம் வழியாக... ராமநாதபுரதை கடந்து இப்போது உத்திரகோசமங்கையில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... சில நாட்களில் பரமகுடி வந்து விடுவார்கள் போல் தெரிகிறது...

சிங்கள படை மற்றொரு பிரிவு யாழ்பாணத்தை கடந்து கோடியகரை... வேதாரண்யம் வழியாக... வேளாங்கன்னியை கடந்து... இப்போது பொய்ங்கைநல்லூரில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... நாளை அவர்கள் நாகப்பட்டினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்... மற்றும் மாவட்ட ஆட்சியரையும் பிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்...

இப்படி பொந்து... தினமலம் கணக்குபடி... சிங்கள படைகள் விரைவில் கிலோ மீட்டர்... கிலோ மீட்டராக முன்னேறி சென்னைக்கு வந்து முதல்வர் கலைஞரையும்... ஆளுனர் பர்னாலாவையும் பிடிக்க சிங்கள சிறைகளில் அடைக்கப் போகிறார்களாம்... பின்னர் சோரம் போன சோமாறி பயல் சோ தான் தமிழக ஆளுனராம்... பொந்து ராம்... ஜெ போன்றவர்கள் சிங்கள அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்பட போகிறதாம்...

சிங்கள படைகளின் வீர தீர வெற்றிகளை பாராட்டி... மன்மோகன்... சோனியா... அத்வானி... கூட்டனி... சி.பிஎம். போன்ற கட்சிகள் பேரதரவோடு... தமிழ் நாட்டை சிங்களர்களுக்கு அடிமையாக எழுதி கொடுக்க போகிறார்களாம்... அந்த அடிமை சாசனத்தை பிரனாப் முகர்ஜி முன்னிலையில்... சிவசங்கர மேனன் எழுதி தர போகிறாராம்...

இனிமேல் தாய் தமிழர்கள்... சிங்களர்களின் அடிமை...

Sunday, December 7, 2008

இந்தியாவில் தீவிரவாதம்...

1980 களுக்கு முன்... இந்தியா எனும் பெயரில் அழைத்து கொள்ளும் நாட்டில் தீவிரவாதம் எனும் வழக்கத்தில் இல்லை...

அதற்கு முன் 1960 களின் பிற்பகுதியில் மேற்கு வங்கத்தில் தொடங்கிய வர்க்க போராட்டம் நச்சல்பாரிகள் இயக்கமாக... ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் எனும் அளவில்தான் இருந்தது... நச்சல்பாரிகல் இயக்கத்தினர் மக்களை தாக்குவதை செய்ய மாட்டார்கள்... அவர்கள் ஆதிக்க வர்க்கத்தை... சமுதாயத்தை அடிமைபடுத்தி வைத்திருந்த பெருநில உரிமையாளர்களை மட்டுமே... தாக்கியும்... கொலை செய்தும் வந்துள்ளனர்...

1980 களுக்கு பின்னே... தீவிரவாதம் எனும் சொல் வழக்கத்திற்கு வந்துள்ளது... இந்தியாவில் இருந்த... இருக்கும் தீவிரவாத அமைப்புகள் பற்றி... சற்றே பின்னோக்கி பாருங்கள்...

1980 - 1991 - பஞ்சாப்... காலிஸ்தான் தீவிரவாதம்.... பஞ்சாபில் இருக்கும் அகாளிதள் இயகங்களை பலவீனபடுத்தவே தீவிரவாதத்தை... ஊட்டி வளர்த்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா... காராணம் அகாளிதள் இயகங்களின் வளர்ச்சியால் பஞ்சாபில் காங்கிரஸ் காணாமல் போனது... பஞ்சாப் தீவிரவாதிகளை காரணம் சொல்லிதான் 1984 இல் பஞ்சாபில் எஸ்.எஸ்.பர்னாலா (இப்போதைய தமிழக ஆளுனர்) ஆட்சியை இந்திரா அரசு கலைத்தது... இந்திரா வளர்த்த பிரந்திரன்வாலே... பொற்கோயில் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்தான்... இந்திரா 1984 அக்டோபர் 31 இல் அதன் பலனை அனுபவித்தார்...

1983 - 1991 - அஸ்ஸாம் உல்பா தீவிரவாதம்... அஸ்ஸாமில் 1982 இல் நடந்த மாணவர் புரட்சியின் மூலம்... மாணவர் தலைவர் பிரபுல்லகுமார் மகந்தா... அஸ்ஸாம் கனபரிஷத் கட்சியின் மூலம் முதல்வர் ஆனார்... அங்கேயும் மகந்தாவின் அரசை ஆட்டி படைக்கவும்... கலைக்கவும்... இந்திராவும்... ராஜிவும் தேர்ந்தெடுத்த உத்தி... உல்பா தீவிரவாதம்... இவர்களை ஊட்டி வளர்த்தவர்கள்... இந்திரா... ராஜிவ்...

இந்த இரண்டு பிரச்சனைகளும்... மக்கள் பிரச்சனைகள்... சமுதாய பிரச்சனைகள் என்பது மறந்து போய்... காங்கிரஸ் கட்சிக்கும்... இந்திரா-ராஜிவ் குடும்பத்திற்குமான தனிப்பட்ட பிரச்சனைகள் போல் கையாளப்பட்டன... 1991 இல் ராஜிவ் பலி கொடுக்கப்பட்ட பின்னர்... பஞ்சாப் - அஸ்ஸாம் தீவிரவாதம் மறைந்து... அங்கே குடியரசு தலைவர் ஆட்சிகள் போய்... மாநில... மக்கள் ஆட்சி நடத்த முடிகிறது... உண்மையில் பஞ்சாப் - அஸ்ஸாம் தீவிரவாததின் உண்மை முகங்கள்... இந்திரா-ராஜிவ்...

1989 - இன்று வரை... காஷ்மீர் தீவிரவாதம்... கிட்டத்தட்ட 1989 வரை காஷ்மீரில் ஏன் தீவிரவாதம் நடக்கவில்லை என்பதை யாரும் சிந்திக்க முற்படவில்லை? அங்கே ஷேக் அப்துல்லா தேசிய மாநாடு கட்சியின் முதல்வராக இருந்த 1986 வரை பிரச்சனைகள் இல்லையே? 1960 களில் நேருவும் ஷேக் அப்துல்லாவும் செய்து கொண்ட ஒப்பந்ததின் படி பிரச்சனை இல்லாமல் போய் இருப்பதாக கொள்ள முடியும்... 1986 வரை சரியாக இருந்த ஜம்மு-காஷ்மீர் நிலை... 1990 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ஆட்சி ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? காரணம் பரூக் அப்துல்லா - ராஜிவ்... நீரோ மன்னன் போல் ஆட்சி செய்த ராஜிவின் அவலம் நாடு அறிந்த ஒன்றே... 1987 இல் இருந்து 1989 வரை காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக்... இந்தியாவில் வாழந்த காலம் 6-8 மாதங்கள்... இங்கிலாந்தில் வாழ்ந்த காலம் 26-30 மாதங்கள்... அப்படி என்றால் அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு... நிர்வாக நிலை எப்படி இருக்கும்? நீரோ மன்னன் போல் ஆட்சி நடத்திய ராஜிவும்... 1987- 89 களில் 23 ஆம் புலிகேசி போல் ஆட்சி செய்த பரூக் அப்துல்லாவும்தான் இப்போதைய ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைகளுக்கு காரணம்...

1985- இன்று வரை... ஆர்.எஸ்.எஸ்.... வி.எச்.பி...பாஜக... சங்பரிவார் இந்து தீவிரவாதம்... 1948 இல் இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மாகத்மா காந்தி கொலைக்கு பிறகு... இந்து தீவிரவாதம் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது... ஜனசங்கம்... ஜனதாவில் சங்கமம் ஆகி... பின்னர் 1980 இல் ஜனதா சங்கமத்தில் இருந்து வாஜ்பாய்-அத்வானி கூட்டனி கரைந்து வந்ததது... பாரதீய ஜனதா கட்சி... 1984 இல் பாஜக மக்களவை உறுப்பினர்கள் 2 பேர்... 1988 வரை பாஜகவின் தலைவர் வாஜ்பாய்... அவரால் சரியாக வளர்க்க முடியாமல் போன கட்சியை 1988 இல் தலைவரான... ஜின்னா கொலை முயற்சி குற்றவாளி எல்.கே.அத்வானி கண்டிபிடித்த ஆயுதம்... ராம ஜென்ம பூமி...

1989 தேர்தலில் நீரோ மன்னன் ராஜிவை விரட்ட... ஏற்ப்பட்ட கூட்டனி... ஜனதா தளம்... பாஜக... அப்போது ஜனதா தளம் 136 தொகுதிகளிலும்... பாஜக 118 தொகுதிகளிலும் வெற்றி பெற்று... இடதுசாரிகள் ஆதரவுடன் தேசிய முன்னனி ஆட்சி அமைக்கப்பட்டது... 1990 ஆகஸ்ட் மாதம் மண்டல் குழு அறிக்கையின்படி பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வி.பி.சிங் அரசால் வழங்கப்பட்டது... சமூக நீதிக்கு எதிரான பா-ர்ப்பன பாஜக... 1990 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வட மாநிலங்களிலும்... ஆந்திரா கர்நாடகா உட்பட மாணவர்களை தூண்டி... முதல் பா-ர்ப்பன சாதி தீவிரவாத்தை தொடங்கியது... இதில் என்ன கொடுமை என்றால்... பாஜகவின் மாணவர் அமைப்புகள் தூண்டி விடப்பட்ட பிற்ப்பட்ட சாதி மாணவர் தீக்குளித்து இறந்தனர்... (இந்த செய்தியை சந்தேகிப்பவர்கள் 1990 அக்டோபர் 21 - நவம்பர் 5 காலதிற்கான இந்தியா டுடே இதழை தேடிப் படிக்கலாம்... மாணவர்களின் படம்... பின்னனியோடு செய்தி இருக்கும்)...

1990 நவம்பரின் ராமன் கோயில் கட்ட... ரதத்தில் கிளம்பிய அத்வானி கைதுக்கு பின் வி.பி.சிங் ஆட்சி விலகியது...

1992 டிசம்பரில் காங்கிரஸ் கட்சியின் நரசிம்மராவை சாட்சியாக கொண்டே... அத்வானி - முரளிமனோகர் ஜோஷி கூட்டம் பாபர் மசூதியை இடித்தது...

இந்த சம்பவத்தை லோக குரு காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எப்படி வர்ணித்தார் தெரியுமா? "நம்மவா பிஜேபிகாராவால கூட செய்ய முடியாததை... நரசிம்மராவ் செய்து முடித்தார் தெரியுமோல்லியோ? இவா காலத்திலதான பாபர் மசூதிய இடிச்சா"...

அப்போதைய தமிழக முதல்வர் ஒருவர்தான் 1992 டிசம்பரில் மசூதி இடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாஜவிற்கு ஆதரவாக பேசியவர்...

இப்போது நடக்கும் அனைத்து இஸ்லாமிய தீவிரவாதங்களுக்கும் மூலம் பாபர் மசூதி இடிப்பு...

இந்தியாவின் தீவிரவாததிற்கு முழு பொறுப்பு... கையாலாகத காங்கிரஸ் கட்சியே... காங்கிரஸ் சரியான முறையில் மக்கள் ஆதரவின் மூலம் மத வெறி சக்திகளை ஒழித்திருக்கலாம்... ஆனால் காங்கிரஸ் அப்போது ராஜிவை கொண்டு நீரோ மன்னன் போல் அல்லவா ஆடியது...

இன்று இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி முட்டி... முட்டி அழுபவர்கள்... அந்த தீவிரவாதிற்கான காரணத்தை மறைப்பதேன்?

இந்தியாவில் இந்துக்கள் என சொல்லி கொள்வர்களுக்கு தீவிரவாதம் நடத்தவும்... மக்களை கொலை செய்யவும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதா?

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். - பாஜக போன்ற மதவெறி சக்திகள் வளர... வளர... தீவிரவாதம் வளர்ந்து கொண்டே இருக்கும்...

Saturday, July 26, 2008

தாசாவதார... உண்மை முகம்

நான் படத்தில் உள்ள முதல் 10 நிமிட காட்சியில் வருவதை சொல்லி விடுகிறேன்...

முதலில் 12 ஆம் நூற்றாண்டில் தில்லையில் சைவ கோயிலில் ஒண்டு குடுத்தனம் நடத்திய நாமம் போட்ட சாமியை... விரட்ட... வேலை செய்யும்... இரண்டாம் குலோத்துங்கனுக்கு... சைவ மதம் பிடித்து விட்டதாக வசனம் பேசுவார்...

பின்னர் நாமம் போட்ட சாமியை... வேலைகாரர்கள் பெயர்ப்பதாக காட்டி... அதனை... இந்த நாமம் போட்ட நம்பி தடுப்பதாகவும்... காட்டுவார்... அப்போது இந்த நாமம் போட்ட நம்பி... 10 பேரை அடிப்பார்... சிலரை கொல்வதாகவும் காட்டுவார்... பின்னர் இந்த நம்பி தன்னை பற்றி சுயபுராணம் பேசி... அரசனுக்கு பிரம்மகத்தி தோசம் பிடிக்க போவதாக சவால் வேறு...

சோழன் நம்பியை... ஓம் நமச்சிவாய... என சொல்ல சொல்லும் போது... நம்பியின் மனைவி அந்த சைவ சொல்லை என சொல்லுங்கள் என நம்பியிடம் கெஞ்சி கேட்ட போகும் போது... ஓம் எனும் அடுத்த சொல்லான நமச்சிவாய எனும் சொல்லை சொல்லவிடாமல் நாமம் போட்டவர்கள் தடுக்கும் வைணவ மத வெறியையும்... நம்பி... ஓம்.... ..... ........ எனும் நாமகாரர்களின் சொல்லை சொல்லும் மதவெறியையும்... யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்...

ஆனால்...

பின்னர் நாமம் போட்ட நம்பியை... சோழன் கொடூர தண்டனை கொடுப்பதாக காட்டுகிறார்... அப்போது நாம நம்பியை கழுகு வந்து வாழ்த்துவதாகவும்... அதனை சைவர்கள் வில்லால் தாக்கும் அது கோயில் கோபுரம் பக்கம் போவதகவும் காட்டுகிறார்...

ஆனால் நம்பியை... கல்லோடு கட்டி... மிக கொடூரமாக... நம்பியின் மகனை கொண்டு... இறுதி சடங்கெல்லாம் செய்து... கடலில் போடுவதாக காட்டி... நம்பியின் மனைவி தாலியை... சோழன் மீது வீசுவதாக முடிகிறது...

பாட்டின் இடையே... சைவர்கள் வணங்கும் கடவுள் சிவனின் வடிவான லிங்கத்தை... கல் என்கிறார்... (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது) கூடவே... சிவனின் நெற்றி கண்ணை... பூனை கண் என கிண்டல்... (பூனை கண்ணால் பார்த்தால் எதுவும் குற்றம்தான்)... சோழன் மன்னனை விட நம்பி உயர்ந்தவன்... (ராஜனுக்கு ராஜன்... இந்த ரங்கராஜன் தான்)... தில்லை... தொல்லை... சீனிவாசனுக்கும்... ராஜலட்சுமிக்கும் (கமலின் உண்மையான தந்தை... தாய் பெயர்கள்... சீனிவாசன்... ராஜலட்சுமி) பிறந்த நம்பி உயர்வானவன் என்றெல்லாம் சுய விளம்பரம் வேறு...

இப்படி 12 ஆம் நூற்றாண்டு காட்சிகளை பார்ப்பவர்களுக்கு... இரண்டாம் குலோத்துங்கன்... மதவெறியனாகவும்... சைவ சமயத்தினர் கொடூரமானவர்களாகவும்... நாமம் போட்டவர்கள் நல்லவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது...

ஆனால் உண்மை நிலைக்கு வருவோம்...

இப்போதும் கூட... தில்லையில் நாமம் போட்ட சாமி ஒண்டு குடுத்தனம் இல்லை... தனியாக ஒரு பகுதியை ஆக்கிமித்து கொண்டுள்ளார்... சில மாதங்களுக்கு தில்லை சைவ கோயிலை கூட இந்த நாமம் போட்ட சாமிக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுக்க வேண்டும் என நாமகாரர்கள் பிரச்சனை செய்து கொண்டுள்ளனர்... படத்தில் காட்டபட்டது ஒன்றும் நடக்கவில்லை...

பல நூற்றாண்டுகளாக தில்லை... தில்லைவாழ் அந்தணர்கள் (தீட்சிதர்கள்) கட்டுப்பாட்டில்தான் உள்ளது... ராஜராஜன் காலத்தில் தீட்சிதர்கள்... மறைத்து வைத்திருந்த சைவ திருமுறைகள் மீட்கப்பட்டன... காடவர்கோன் காலத்தில்... தீட்சிதர்கள் சில காலம் தில்லையில் இருந்து விரட்டப்பட்டனர்... மற்றபடி எல்லா காலங்களிலும் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்டம்தான்... இரண்டாம் குலோத்துங்கன் வந்தான் என்பது எல்லாம்... கமலின் பொய்... புரட்டு....

சைவ கோயில்களின் நாயன்மார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு.... 1. திருஆரூர்... 2. தில்லை (கோயில்)... மாணிக்கவாசகர்... தில்லையை கோயில் என்றுதான் திருவாசகம் பாடியுள்ளார்...

அதே போல் வைணவத்தில் ஆழ்வார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு... 1. திருவரங்கம்... 2.திருமலை (திருப்பதி)...

சாதாரண என்னை போன்ற ஒரு முட்டாளின் கேள்வி என்னவென்றால்...

இங்கே தில்லையில் நாம்ம போட்ட சாமிக்காக அழுவோர்... திருவரங்கத்திலோ... திருமலையிலோ... வேறு எந்த நாமம் போட்ட கோயில்களிலாவது ஏதாவது பட்டை(சைவ) போட்ட சாமிக்கு ஒரு அங்குலம் இடம் உண்டா என சொல்ல முடியுமா?

இந்த நியாயப்படி பார்த்தால்... படத்தில் காட்டுவது... தில்லையில் நாமம் போட்ட சாமியை பெயர்த்து எறிவது நியாயமே...

உண்மையில் வைணவம் என்பது... தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதானே? அது வந்தேறிகளின் மதம்தானே?

இப்படி வந்தேறி (வைணவ) மதத்தை கமல் தூக்கி பிடிப்பதன் நோக்கம் என்ன? தனது ஆரிய பாசம்தானே?

இன்னொரு செய்தியும் நாம் அறிந்து கொள்வோம்...

இந்த படத்தில் சைவ சமய வெறியனாக காட்டப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் கம்ப இராமயணம்... திருவரங்கம் கோயிலில் அரகேற்றப்பட்டது...

குலோத்துங்க சோழர்கள் காலத்தில்தான் சோழ நாட்டில் வைணவம் வளர்ந்ததாக சொல்லலாம்...

மேலும்... திருகாரகோணத்தில் (நாகப்பட்டினம்) இருந்த ஜைன மடாலத்தையை சூறையாடி கட்டியதுதான்... நாமகாரர்களின் திருவரங்கம் கோயில்...

இப்படி எல்லா அயோக்கியதனங்களையும் செய்த... நாமகாரர்களுக்கு... இப்போது கமல் பல்லக்கு தூக்குவது... என்ன பாசம் என தெரியவில்லை...

வயது... ஆக... ஆக... தானாக வளரும்... ஜாதி வெறி... இப்போது வளர்வது இதுதான்... கர்நாடகத்தை எதிர்த்து... நடத்தப்பட்ட உண்ணா விரத்தில்... எனக்கும் கும்ளேவும் வேண்டியவர்... வைரமுத்துவும் வேண்டியவர்... என போராட்டம் நீர்த்து போக விரும்பிய நபர் கமல்...

இடையில் கமல்... பகுத்தறிவு பேசி... நம்மை குழப்பி வருகிறார்...

பூனை... கொஞ்சம்... கொஞ்சம் வெளி வந்து கொண்டுள்ளது... விரைவில் சாயம் வெளுத்து விடும்...

Sunday, April 13, 2008

சமஸ்கிருதம் கொண்ட தமிழ் புத்தாண்டு எனும் மோசடி ஒழிக்கப்பட்டது ஏன்?

தமிழுக்கும் தமிழருக்கும் தொடர்பில்லாத வடமொழியை கொண்டு தமிழ் புத்தாண்டு எனும் மோசடி, ஏமாற்று வேலை... அயோக்கியதனம்...

மானமுள்ள தமிழர்களால்... மானமுள்ள தமிழர்களுக்காக ஒழிக்கப்பட்டது ஏன்?

வடமொழி சொற்களை கொண்ட பிரபவ, பவ, வெகுதான்ய... போன்ற எதுவும் தமிழ் அல்ல... தனக்கு தொடர்பில்லாத ஒன்றை தமிழன் தூக்கி எறிவது சரியான முடிவே...

ஆதிக்க சக்திகளால் தமிழனுக்குள் புகுத்தப்பட்ட இந்த... சமஸ்கிருத அவமானத்தை துடைத்து எறிய... தமிழனுக்கு 90 ஆண்டுகள் ஆகியுள்ளது... இந்த புத்தாண்டு எனும் இழிவை... தூக்கி எறிய 1915 இல் இருந்தே... தமிழ் தென்றல் திரு.வி.க. மற்றும் தமிழ்மாமலை மறைமலை அடிகள் இருவரும் இறுதி காலம் வரை போரடி சென்றுள்ளனர்... கடந்த நூற்றாண்டில் திரு.வி.க. மற்றும் மறைமலை அடிகள் இருவரும் தமிழுக்கும்.. சைவ சமயதிற்கும் ஆற்றிய தொண்டு ஈடு இணையற்றது... இந்த ஆண்டு திமுக-கலைஞர் கருணாநிதி எனும் கருவியால் துடைக்கப்பட்டது... தமிழன் மீது திணிக்கப்பட்ட புத்தாண்டு எனும் சமஸ்கிருத இழிவு... இந்த செயல் தமிழுக்கும்... சைவதிற்கும்... திரு.வி.க.விற்கும்... மறைமலை அடிகளுக்கும்... தமிழன் கொடுக்கும் மரியாதை...

உழவர் திருநாளையும்... திருவள்ளுவர் நாளையும்... புத்தாண்டாக கொண்டாடுவதை... தமிழன் தை... தை... என குதிக்கிறானாம்... பேனாவில் மை நிரப்புவதற்கு பதில் அமிலத்தை நிரப்பி... ஆனந்த விகடனில் எழுதியுள்ளார்... ஒரு ஆதிக்க சக்திகளின் பிரதிநிதி... திருவெல்லிகேணியில் இருந்து கிளம்பிய மதனமானவர்... தமிழன் ஒன்றும் அந்த மதனமானவரின் வயிற்றில் தை... தை... என குதிக்க வில்லையே... அப்புறம் ஏன் அந்த மதனமானவருக்கு... தமிழன் மீதும்... தமிழன் கொண்டாடும் தை புத்தாண்டு திருநாள் மீதும் அவ்வளவு வயிற்று எரிச்சல்?

அந்த மதனமானவர்... சித்திரமாய் வரைந்து திரையிட்டு மறைத்து இருந்த... அவரது முகமுடி கிழிந்தது...தமிழனை கண்டு எரியும் அந்த மதமானவரின் கோர முகம்... வெளியே தெரிந்து விட்டது...

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியும் தெரிவிக்க வேண்டியுள்ளது...

தாரண ஆண்டு பஞ்சம்...

1883 இல் முதன் முதலில் தமிழ் நாட்டில் இரயில் இயக்கப்பட்டது... அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் 1884 இல் கடும் பஞ்சம் ஏற்ப்பட்டது... அந்த சமஸ்கிருத ஆண்டின் பெயர் தாரண ஆண்டாம்... இரயில் ஓடியதால்தான் தாரண ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது என பொய் மூட்டைகள் அவிழ்த்து விட்டன... ஆதிக்க சக்திகள்...

இங்கிலாந்த முதலில் ஜார்ஜ் ஸ்டிபன்சன் என்பரால் இரயில் ஓட்டப்பட்ட போது... எப்படி பிற்போக்குவாதிகள்... கோழிகள் முட்டியிடாது... மாடுகள் கன்று போடாது... என பொய் பரப்பினார்களோ அது போல... தமிழகத்தில் ஆதிக்க சக்திகள்.. இரயில் ஓடினால் பஞ்சம் ஏற்படும் என பொய் பரப்பப்பட்டது...

இங்கே உள்ள ஆதிக்க சக்திகளுக்கு இரயில் மீது ஏன் வன்மம்...

அந்த காலத்தில் வெள்ளைகாரர்களால் இயக்கபப்ட்ட இரயில் பயண கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும்... ஆனால் ஆதிக்க சக்திகளால் இயக்கப்பட்ட பேருந்துகளில்... உயர் சாதியினர் மட்டும்தான் பயணம் செய்ய முடியும்... தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இரயில் வந்தால் பயணம் செய்து விடுவார்கள்... அதனால் இரயில் திட்டங்கள் வளர கூடாது என்பதற்கு ஆதிக்கசக்திகள் எடுத்த ஆயுதம் தாரண ஆண்டு பஞ்சம்...

இப்படி சமுதாயத்தை அடிமைபடுத்த... அடக்கி வைக்க... ஆதிக்க சக்திகள் எடுத்த ஒரு ஆயுதம்... சமஸ்கிருதததை கொண்டு புகுத்திய புத்தாண்டு எனும் புனையல்... இந்த இழிவான சமஸ்கிருத புத்தாண்டு எனும் புனையலை... இன்று தமிழன்... கலைஞர் எனும் கருவியால் துடைத்து கீழே போட்டு விட்டான்...

பொறுத்து இருப்போம்... இன்னும் 9 மாதங்கள்...

தமிழன்...

உழவர் திருநாளை... திருவள்ளுவர் திருநாளை... தமிழ் புத்தாண்டாக கொண்டாடி... கீழே கிடக்கும் சமஸ்கிருத இழிவின் மேல் ஏறி... தை... தை... என ஆடுவான்...

அப்படி தமிழன் தனது திருநாளை கொண்டாடி மகிழ்வதை... கண்டு... ஆதிக்க சக்திகள்... அவர்கள் வயிற்றின் மீது தை... தை... என ஆடிகிறார்கள்... என கற்பனை செய்து அஞ்சினால்... அவர்களுக்கு தேவை... அவர்களின் மனநோய்கான சிகிச்சைதான்...

Saturday, April 5, 2008

பொருளாதார மேதை... அதியமானுக்கு பதில்...

K.R.அதியமான். 13230870032840655763 said...
உல்கம‌யமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே அதை 'எதிர்பதாக' பலரும்
கருதுவது ஒரு நகைமுரண். என்னுடன் அன்று நீண்ட நேரம் வாதம் செய்த நண்பர் பாரி ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனதில் 'ந‌ல்ல' வேலையில் உள்ளார் ! அந்த வேலை வாய்ப்பு, இந்த இலவச பிளாகர், (ஜி மெயில் நிறுவனத்தின் பரிசு), மலிவான இன்டெர்னெட், கனனிகள், பல லச்சம் புதிய வேலை வாய்ப்புகள், பொருட்க்கள், அரசுக்கு வரிகள் மூலம் பல லச்சம் கோடி புதிய வருமானம்...
இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயிற்று..

1980வாக்கில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் கமல் வேலை கிடைக்காமல் சிங்கள் டீக்கு லோல்பட்டது போனற் நிலைமை இன்றைய இளைஞ‌ர்களுக்கு இல்லை. அப்பெல்லாம் இருந்த வறுமையின் அளவு, வேலை வாய்ப்புகள் பற்றி சொன்னாலும் புரியாது.




உலகமயமாக்கல் பற்றி வலைபதிவர் சந்திப்பில் விவாதம் செய்த போது... நிறைய செய்திகள் விவாதிக்கப்பட்டது... அப்படி விவாதிக்கப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து இருக்கலாம்... அதை விட்டு... உலகமயமாக்கலை எதிர்த்த பதிவர்களை அரைகுறைகளாகவும்... அவரும்... மாமா டோண்டுவும் பெரிய பொருளாதர மேதைகள் போலவும் எழுதி இருக்கிறார்... கே.ஆர்.அதியமான்...

இப்பொது அவர் பதிவு செய்துள்ள கருத்துகளை பார்க்கலாம்...

எனக்கு வேலை கிடைத்தற்கு காரணம்... உலகமயமாக்கல் என எழுதியுள்ளார்... உண்மையில் இது காரணம் இல்லை... நான் படித்த தொழில் சார்ந்த படிப்புதான் காரணம்...

மேலும் இணையமும் கூகில் போன்றவைகள்தான் வேலை வாய்ப்பிற்கு காரணம் எனவும் எழுதியுள்ளார்..

ஆனால் அதியமானுக்கும் கணினி துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என நம்புகிறேன்...

இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் பற்றிய செய்திகள் கீழே...

1. டிசிஎஸ் என அழைக்கபடும் டாடா நிறுவனம் தொடங்கப்பட்டது... 1969 இல்
2 பட்னி நிறுவனம் தொடங்கப்பட்டது 1970களின் இறுதியில்
3. இன்போசிஸ் தொடங்கப்பட்டது 1982 இல்
4. விப்ரோ தொடங்ப்பட்டது 1970களின் இறுதியில்
5. சத்யம் தொடங்கப்பட்டது 1986 இல்


டிசிஎஸ் 1985 ஆம் ஆண்டே தனது அமெரிக்கா நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது...

சத்யம் 1991 ஆம் ஆண்டே அமெரிக்கா நிறுவனத்துடன் இந்தியாவில் இருந்து பணி சேவை (Offshore) செய்யும் ஒப்பந்தம் செய்து கொண்டது...

இதெல்லாம் உலகமயமாக்கலால் வந்தது அல்ல...

மேலும் இங்குள்ள நிறுவனங்கள் கூகில் போன்ற இலவச சேவைகளை கொண்டு தொழில் செய்வதில்லை... இது பொய்யான தகவல்...

அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நிறுவனங்கள் பெரிய அளவில் இந்தியாவுடன் மென்பொருள் சேவை ஒப்பந்தம் தொடங்கிய 1995 - 96 ஆம் ஆண்டுகளின் போது... அப்பொது பிரச்சனையாக இருந்து Y2K பிரச்சனைக்கு எளிதான தீர்வை... இந்திய நிறுவனங்கள் அளித்தன... அதன் பிறகுதான் உலக நிறுவனங்கள் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைத்து... நிறைய மென்பொருள் சேவை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொண்டன... இதற்கும் உலகமயமாக்கலுக்கும் எந்த தொடர்பும் இல்லை...

ஐபிஎம் போன்ற அமெரிக்க நிறுவங்கள்... 1 மணி நேரதிற்கு வாங்கும் 200 டாலரான சேவை கட்டணத்தை... இந்திய மென்பொருள் நிறுவனங்கள் 15- 25 டாலருக்கு செய்து கொடுக்கின்றன...

இதுதான் இந்திய மென்பொருள் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணம்... குறைந்த கட்டணத்திற்கான சேவை... இது உலகமயமாக்கலால் நடந்தது அல்ல...

அதியமான் என்ற பதிவர் அவருக்கு தெரிந்த கூகில், ஜி மெயில், பிளாகர் இலவச சேவை... இதுதான் கணிபொறி உலகம் என நினைக்கிறார்... உண்மையில் கணினி நிறுவனங்களில் அவர் குறிபிட்ட இலவச சேவைகள் எல்லாம் தடை செய்யப்பட்டவை...

தனக்கு தெரியாத துறை பற்றி பேசாமல் இருப்பது நல்லது...

1980 களில் வேலையில்லா திண்டாட்டம் இருந்ததாக வருந்தும் பதிவர் சொல்வது... பூனை கண்ணை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பது போல் உள்ளது...

1980 களில் தொழில் துட்ப படிப்பு படித்த பொறியாளர்கள் (பட்டம் மற்றும் பட்டயம்) படித்த யாருக்கும் வேலை கிடைக்காமல் இல்லை... வறுமையில் நிறம் சிவப்பு படத்தில் காட்டி இருப்பது போல் போல் இப்போதும் பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் உண்டு...

அதியமான் போன்றவர்களுக்கு உறங்குவதும், எழுவதும், மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும், நடப்பதும், ஓடுவதும், படுப்பதும் போன்ற இயல்பான வேலைகள் கூட உலகமயமாக்கலால் நடக்கிறது என நினைத்து கொண்டுள்ளார்கள்...

கேட்டால் 1980 களில் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்ததாகவும்... உலகமயமாக்கலால் சரியானதாகவும் சொல்வார்...

ஒரு இடத்தில் நடந்த விவாதம் பற்றி எழுவது என்றால் முழுதாக எழுத வேண்டும்... இல்லா விட்டால் மூடி கொண்டு இருக்கலாம்... மாமா டோண்டு அப்படிதான் சரியாக மூடி கொண்டு இருந்தார்...

அதியமான் என்ற பதிவருக்கு பார்வை எல்லாமே சுயநல பார்வைதான்... 1970 களுக்கு முன் பிறந்தவர்களுக்கு வேலை கிடைக்க வில்லை... 70 களுக்கு பின் பிறந்தவர்களுக்கு எல்லோருக்கும் நல்ல வேலை கிடைத்து விட்டதாம்... உலகமயமாக்கலால்... 1970 களுக்கு முன் பிறந்த யாரும் உருபடவே இல்லையா? 70 களுக்கு பின் பிறந்த அனைவரும் கட்டு கட்டாக பிடுங்கி விட்டார்களா?

அதியமான்... ஜாதகம்... எண் கணிதம் போன்ற மூட நம்பிக்கைகளை பேசும்... தன் நன்பிக்கை இல்லாத ஒரு ஜென்மம்... மற்றவர்களுக்கு பாடம் சொல்ல கிளம்புகிறது...

அதியமான்... மற்றவர்கள் விவாதம் செய்த கருத்துகளையும் பதிவு செய்து விட்டு... உங்கள் விவாதத்தையும் பதிவு செய்வது நேர்மையான செயல்... அதை விட்டு... உங்கள் கருத்தை மட்டும் பதிவு செய்து... மற்றவர்களை முட்டாள் ஆக்கியது... இது உங்களை மட்டும் வீரர் என சொல்லி கொள்வது பொட்டைதனம்... ஆணமையில்லாதவர்கள் செய்வது...

உங்களது ஆண்மையற்ற... பொட்டைதனமான... பார்ப்பன அடிவருடிகளின் அயோக்கியதன்னத்தை... என்னை போன்றவர்களால் பொறுத்து கொள்ள முடியாது... நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...

தனிமனிதனை பற்றி நேர்மை இல்லாமல் தாக்கியவதற்கு பதில்தான் இது...
நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை...

Friday, April 4, 2008

தமிழர் - கன்னடர் பிரச்சனை - யாருக்கு லாபம்?

காவிரி நீர் பிரச்சனை...

இப்போது ஒக்கேனக்கல் பிரச்சனை...

இந்த இரண்டு பிரச்சனைகளும் தமிழர்களுக்கும் கன்னடர்கள் இடையே பெரும் பகையை உண்டாக்கியுள்ளன...

இப்போது ஒக்கேனக்கல் பிரச்சனையில் தமிழர்கள் அனைவரும்... சமூக விரோதிகள் போல் செயல்படும்... கன்னட வன்முறை அமைப்புகள்... பாஜக... வட்டள் நாகராஜ் குழு, நாராயண கௌடா குழு போன்ற குழுக்களை சாடுகின்றனர்...

ஆனால் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் மட்டும் கருத்து கூறாமல் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?

அந்த தலைவர் ஜெ...

காரணம்...

1. பிறப்பால் கன்னடர் எனபதலா?

2. வருமானதிற்கு அதிகமாக 72 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்ந்த வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் தொங்கி கொண்டு இருப்பதாலா?

3. ஏற்கென்வே நடந்த ஊழல் வழக்குகளில் அத்வானி - முரளி மனோகர் ஜோஷி கும்பல் காப்பாற்றியது போல்... எடியூ... பொறுக்கியும்... பங்காரப்பாவும் காப்பாற்றுவார்கள் எனும் நம்பிக்கையா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிற்காக தன்னுடைய எலும்பை முறித்தாலும் நிறைவேற்றுவேன் என அறிவித்துள்ளார் கலைஞர்...

கன்னட சமூக விரோதிகள்... கலைஞரில் எலும்பை முறிக்க போகிறார்களா?

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? கிருஷ்ணகிரி... தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நீர் கிடைத்தால் என்ன? கிடைக்கா விட்டால் என்ன?

ஜெ... மௌனமாகவே இருப்பார்...

காரணம்...

1. 1 ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெ... 72 லட்சம் ரூபாய்க்கு எப்படி பொருள்கள் வாங்கினார்?

2. 7 லட்ச ரூபாய்க்கு எப்படி செருப்புகள் வாங்கினார்?

3. 15 லட்சம் ரூபாய்க்கு புடவைகள் எப்படி வாங்கினார்?

4. சில லட்சம் ரூபாய் சிறப்பு வசதியுடைய பேருந்து எப்படி வாங்கினார்?

5. சசிகலாவின் அக்கா மகன் தினகரன்... லண்டனில் 38 லட்சம் ரூபாய்க்கு ஹோட்டல் எப்படி வாங்கினார்?

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிற்கு ஜெ மௌனமாக இருக்கும் போது... மேலே கேட்கப்பட்ட கேள்விகளும்... கர்நாடகா அரசு வழக்கறிஞராக கேட்கபடாமல் இருக்குமே?

இப்படி போராட்டம் நடத்துவதால்...

கர்நாடகா கட்சிகளுக்கு தேர்தலில் லாபமோ?

கிருஷ்ணகிரி... தர்மபுரி மக்களுக்கு குடிநீர் கிடைக்குமோ?

தெரியாது...

ஜெவுக்கு லாபம்... இவ்வளவு உணர்வு ரீதியாக போராடுபவர்களை விட...

மௌனமாக இருந்து ஜெ... லாபமடைய போகிறாரா? அது அவருடைய ரத்தம்... அவருடைய கன்னட ரத்தம்... பார்ப்பன ரத்தம்.. அவரை எப்படியும் காப்பாற்றி விடுமா?

Saturday, March 29, 2008

தில்லையும், தமிழும்

தில்லைத் திருகோயிலில் திருமுறைகள் பாடுவதற்கு தடை என்பது போல் நடைபெறும் போராட்டம் மிகைப்படுத்தப்படுகிறது என்பதே உண்மையான ஆன்மீகவாதிகளின் கருத்தாக உள்ளது.

தில்லைக் கோயில் வழிவழியாக தில்லை வாழ் அந்தணர்களின் நிர்வாகத்தில்தான் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் திருகோயில்கள் பல சைவ - வைணவ திருமடங்களின் நிர்வாகத்தில்தான் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல திருகோயில்கள் வழிவழி (பரம்பரை) அறங்காவலர்களைக் கொண்டுதான் நடைபெற்று வருகின்றன. அத்திருகோயில்கள் இந்து அறநிலையத் துறை ஆணைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நிர்வாக அலுவலர்கள் அரசு - அரசு அலுவலர்கள் - அதன் நிர்வாகத்தில் தவறு நடைபெறாமல் இருக்க உதவி செய்து வருகின்றனர்.

தில்லைவாழ் அந்தணர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் எந்த அரசுக்கும் மேம்ப்பட்டவர்களாக தங்களை காட்டி கொள்வதும், பின் அரசின் அதிகாரம் பலம் வாய்ந்ததாக இருந்தால் பணிந்து போவதும் வரலாற்று செய்திகள்.

சோழர் காலத்திலும், காடவர் கோன் காலத்திலும் தில்லைவாழ் அந்தணர்கள் பணிந்து நடந்தும், பயந்து ஓடியும் உள்ளனர். அது பிறவி உயர்வு என்னும் பேதமையால் வளர்ந்த ஆணவம். சிலரின் பிடிவாதம் பெரும் விவாதமாக வித்திட்டவர்கள் அவர்களே.

திருகோயில்களில் தீப வழிபாட்டிற்கும் பின்னர் திருமுறை - திவ்யபிரபந்தங்கள் ஓதும் பழக்கம் எல்லா இடத்திலும் தடையேதுமின்றி நடைபெற்று வருகிறது. கருவறைக்கும் திருமேனி தீண்டுவாரும் அர்த்த மண்டபம் எனும் கருவறையை அடுத்த பகுதியில் வேதம், தமிழ் மறைகளை ஒதுவாரும் நின்று பாடி வருகின்றனர். அங்கெல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றன. தில்லைவாழ் அந்தணர்கள் இந்த முறையை கடந்த 50 அல்லது 60 அண்டுகளாக மாற்றி திருமுறை பாடுவோரை சிற்றம்பல மேடைக்கு வெளியே அனுப்பி விட்டனர். அதுவே உரிமை பிரச்சனையாக உருவாகிவிட்டது.

தற்போது சிற்றம்பல மேடையில் திருமுறை பாடுபவர்களுக்கு இடம் அளித்து விட்டதால் இருதரப்பாரும் மனம் அமைதி அடைந்திருக்கலாம். எனினும் திருமுறைகளை முற்றிலும் போற்றி புகழ்கின்றவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர். இறைவனை வழிபட மொழி ஒரு தடையல்ல.தில்லைவாழ் அந்தணருக்கும் - திருவாரூரில் பிறந்தார்க்கும் ஒத்த மதிப்பையே திருதொண்டத் தொகையும் திருதொண்டர் புராணமும் வலியுளுத்துகின்றன.

தமிழ் ஞானசம்பந்தர் தம் தந்தை வட மொழியில் வேள்வி செய்ய பொருள் கொடுத்து உதவுகிறார். தம் தமிழ்மொழி வழிபாட்டை வலியுறுத்தவில்லை. உருத்திரம் பாடி முக்தி அடைந்தாரையும் ஒருவிதமான நடைமுறைகளும் அறியாத கண்ணப்பரையும் பெரியபுராணம் எடுத்துக் காட்டுகிறது. ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என அப்பர் பெருமான் படுகிறார்.

தமிழ் ஆர்வலர்களும் தம்மை ஏதோ வடமொழியின் வாரிசுகளாகக் கருதிக் கொண்டு வீட்டிலும் வெளியிலும் பேசுகின்ற மொழியை சிறுமைப்படுத்திக் கொண்டு வருகின்ற அந்தணர்களும் உண்மை நிலைதனை உணர்ந்து கொள்வதுதான் நல்லது.

தமிழ் மட்டுமே அறிந்து தமிழிலேயே பாடி வணங்குகிற 'மதுர காளியம்மன் திருகோயில், அங்காள பரமேஸ்வரி திருகோயில்' போன்ற இடங்களில் பரம வைதீகர்களான அந்தணர்கள் தங்கள் குல தெய்வ வணக்கத்தை தமிழ் பூச்சாற்றிகளைக் கொண்டு பயபக்தியுடன் வணங்குவதை இன்றும் காணலாம். பூச்சாற்றிகள் உள்ள தமிழ் திருகோயில்களில் ஆகமம் படித்த ஆகமவழியைப் பின்பற்றுகின்ற அந்தணர்களிடம் தமிழர்கள் எந்தவித தகராறுகின்றி ((உ-ம்) திருவேற்காடு - வடபழனி) வழிபட்டு செல்கின்றனர்.

ஆணவம் ஆன்மீகத்துக்கு எதிரி. ஆசைகள் பதிவியாசை, பண ஆசை எதுவாயினும் இறைவனுக்கு அருகே செல்ல விடாது என்பதே உண்மை.

ஞானத்தேடல் - 15 மார்ச் 2008 - பங்குனி இதழில் - அதன் ஆசிரியர் நா.துர்க்காசெல்வம்.

Saturday, February 9, 2008

மூத்த திராவிட இயக்க தலைவர் க.இராசாராம் மறைந்தார்...




சேலம் மாவட்டத்தை சேர்ந்த மூத்த திராவிட இயக்க தலைவர் க.இராசாராம் மறைந்தார்...

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 26- 08 - 1926 இல் பிறந்தவர்...

தர்மபுரியில் பள்ளி படிப்பை முடித்து... பின்னர் சேலத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்... படிக்கும் காலத்தில் தமிழ் விழாவிற்கு வந்த பாவேந்தர் பாரதிதாசனால் ஈர்க்கபட்டு திராவிட இயக்கத்தில் இணைத்து கொண்டவர்...

கல்லூரி கல்விக்கு பின்... திராவிடர் கழகத்தில் இணைந்து தொண்டாற்றியவர்... பெரியாருக்கு செயலராக பணியாற்றிவர்...

திமுகவில் இணைந்து... 1962 தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு... ராஜாஜியின் மகன் நரசிம்மனை தோற்கடித்தவர்...

1967 தேர்தலில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்...

அண்ணாவின் நம்பிக்கைகுரிவராக விளங்கியவர்... வட மாநில தலைவர்களுக்கு அன்பிற்குரிய்வராகவும் இருந்தவர்...

அண்ணா வெளிநாடு பயணம் சென்ற போதெல்லாம்... புற்று நோய் சிகிச்சைகாக அமெரிக்கா சென்ற போதும்... இவரும்... இரா.செழியனும் உடன் சென்றார்கள்...

1971 தேர்தலில் போட்டியிட்டு திமுக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சரானார்...

1972 இல் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு விலகிய போது... இவர்தான் கலைஞருக்கும்... எம்.ஜி.ஆருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளை போக்க முயற்சி செய்தார்... எம்.ஜி.ஆர். பிடிவாதமாக இருந்ததாலும்... நெடுசெழியனும்... மதுரை முத்துவும் எம்.ஜி.ஆரை நீக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்ததாலும் இவரது சமரச முயற்சிகள் தோல்வி அடைந்தன...

வீட்டு வசதி வாரிய அமைச்சராக சிறப்பாக பணியாற்றவர்... இப்போது சென்னையில் உள்ள அண்ணா நகர் மற்றும் கலைஞர் நகர் போன்ற இடங்கள் இவரின் ஆலோசனையினால் உருவாக்கபட்டவை...

பின்னர் சில ஆண்டுகள் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிவர்...

இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வந்த போது... கலைஞருக்கும்... வட நாட்டு தலைவர்கள்... ஜெயபிரகாஷ் நாரயண், மொராஜி தேசாய், கிருபாலணி போன்றவர்களுக்கும் பாலமாக செயல்பட்டவர்...

1977 இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பின்... திமுகவின் மீது கடும் குற்றசாட்டுகளை அளித்து... கட்சியை தடை செய்ய முயற்சி செய்ய விரும்பி போது... மத்தியில் ஆட்சி செய்த ஜனதா கட்சியினரும்... பிரதமர் மொராஜி தேசாயும்... கலைஞர் தலைவர் பதவியில் இருந்து விலகி வேறு யாரையாவது கொண்டு வரலாமே என சொன்ன ஆலோசனையை... திமுக செயற்குழுவில் சொன்ன போது கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்தது... அப்போது சேலம் இரயில்வே சந்திப்பில் இவர் மீது தாக்குதல் முயற்சி நடந்ததாலும்... இவர் திமுகவை விட்டு விலகினார்...

1977 இல் இவரும்... நெடுஞ்செழியனும், இரா.செழியனும் சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினர்... மக்கள் திமுகவின் தலைவராக நெடுவும்... பொது செயலாளராக இராசாராமும் இருந்தனர்... கட்சி தொடங்கிய 30 நாளில் மக்கள் திமுகவை... அதிமுகவும் இணைத்தனர்...

1978 இல் இவரது மனைவி மறைந்த போது... எம்.ஜி.ஆர். டெல்லியில் தமிழக சிறப்பு பிரதிநிதி எனும் ஒரு பதவியை உருவாக்கி இவரை டெல்லிக்கு அனுப்பினார்...

1979 இல் ஜனதா அரசு கவிழ்ந்த போது... சரன்சிங் ஆட்சி அமைய அதிமுக ஆதரவளிக்க உதவி செய்தார்...

1980 தமிழக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு... தமிழக சட்ட மன்ற பேரவை தலைவரானார்... செல்லபாண்டியனுக்கு பிறகு தமிழக சட்ட மன்ற பேரவை தலைவராக சிறப்பாக பணியாற்றிவர்...

1984 தேர்தலில் போட்டியிட்டு அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சராக இருந்தவர்...

எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜா அணியில் இருந்தவர்... 1989 சட்ட மன்ற தேர்தலில் ஜா அணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்...

1991 தேர்தலில் சேலம் பனைமரத்து பட்டி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று ஜெ அமைச்சரவையில் உணவு துறை அமைச்சரானார்...

1991 ஆண்டு அக்டோபர் மாதம்... ஜெ மத்திய அரசிற்கு தீபாவளிக்கு குடும்ப அட்டைகளுக்கு பாமாலின் எண்ணெய் ஒதுக்க வேண்டி கடிதம் எழுதிய போது... நரசிம்மராவ் அரசு இல்லை என அனுப்ப வில்லை... உணவு துறை அமைச்சராக இருந்த இராசாராம் டெல்லிக்கு சென்று இவருக்கு வேண்டியவர்களிடம் பேசி தமிழகத்திற்கு பாமாலின் எண்ணெய் அனுப்ப ஏற்பாடு செய்து விட்டு... சென்னை விமான நிலைத்தில் இறங்கும் போது... தன்னால் முடியாத வேலையை... இவர் எப்படி செய்யலாம் என்ற அகம்பாவத்திலும்... சைகோதனமாகவும்... இராசாராமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்...

பின்னர் இவர் ஜெ கட்சியில் இருந்து ஒதுங்கி... இராசாராம், வி.வி. சுவாமிநாதன், பி.எச்.பாண்டியன், திருநாவுகரசு போன்றவர்கள் நல்லாட்சி இயக்கம் என்ற பெயரில் ஜெ செய்த டான்சி ஊழல் போன்ற மோசடிகளுக்கு எதிராக சு.சாமி... வழக்கு போட உதவினர்...

1994 இல் இவரது சட்ட மன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முயற்சி செய்த போது... நீதிமன்ற உதவியினால் தடை வாங்கினார்...

1992- 96 ஜெ ஆட்சி காலத்தில் சட்ட மன்றத்தில் பேசினால் ஜெ கட்சி அடியாட்களால் தாக்க படலாம் எனும் அச்சத்தில்... சட்ட மன்ற நடவடிக்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்...

1996 ஜெ தோல்விக்கு பின் முத்துசாமி, கண்ணப்பன், புட்போட்டு எஸ்.டி.எஸ். போன்றவர்களுடன் சேர்ந்து போட்டி அதிமுகவில் இருந்தார்...

2001 தேர்தலிலும் எம்.ஜி.ஆர். அதிமுக என நடத்தினார்...

2008 பிப்ரவரி 8 ஆம் நாள் சிறுநீரக கோளாரால் சென்னையில் காலமானார்...

பெரிய பதவியில் இருந்தாலும் மிக எளியானவர்... இவரை சாதரணமாக எல்லா இடங்களிலும் காணலாம்... இருவர் படம் பார்க்க சாதரணமாக திரை அரங்கில் பார்த்ததுண்டு...

இவர் இருந்த சாந்தோம் பகுதியில் காலை நடை பயிற்சி செல்லும் போது கூட பார்க்கலாம்... 1994 இல் சில ஜெ கட்சி ரவுடிகள் இவரை காலை நடை பயிற்சியின் போது... தாக்க முயற்சி செய்தனர்...

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அண்ணாவின் குடும்ப திருமணத்தில் எல்லா வேலைகளையும் வலிய போய் செய்தாராம்... அந்த அளவிற்கு அண்ணாவின் மீது பற்றுள்ளவர்...

திராவிட இயக்கம் ஒரு சிறந்த தலைவரை இழந்துள்ளது...

பாவேந்தர்... பெரியார்... அண்ணா... கலைஞர்... எம்.ஜி.ஆர்... மொராஜி தேசாய்... போன்ற பெரிய தலைவர்களுடன் பணியாற்றியவர்...

திராவிட இயக்க வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றியவர்...

சிறந்த நாடாளுமன்றவாதியாக... நடுநிலையான சபாநாயகராக... பொறுப்பான அமைச்சராக... மாறாத பெரியார் தொண்டராக நினைக்கபட வேண்டியவர்... க.இராசாராம்...

Monday, January 14, 2008

ரத்தவெறி பிடித்த மோடி எனும் பேடி...

ச‌ன‌வ‌ரி 14(இன்று) மாலை 6 ம‌ணிக்கு "மலம்" துடைக்குமளவு மதிக்கத்தக்க "துக்ளக்" என்ற‌ பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கையின் 38ம் ஆண்டுவிழாவில் காட்டுமிராண்டி மோடி க‌ல‌ந்து கொள்கிறான், அந்த‌ விழா ந‌ட‌க்கும் காங்கிர‌ஸ் அர‌ங்க‌த்தை


பார்ப்பன பயங்கரவாதி மோடிக்கு
அமெரிக்க கைக்கூலி "சோ"வும்
பாசிசத் தலைவி ஜெயாவும்
அமோக வரவேற்பு!
காங்கிரசோ அதற்கு மேடைவிரிப்பு!!


மேலே உள்ளது ம.க.இ.க. துண்டு பிரசுரம்

சங்கராச்சாரிகளின் மாமா பயல் சோவின் துக்ளக் மலத்தை விட அதிகமாக துர்நாற்றம் கொண்டது... மனநோயாளி சோவின் பத்திரிக்கையை கொண்டு மலத்தை துடைக்கலாம் என சொல்லி... மலத்தை அவமானபடுத்தியது கண்டிக்கதக்கது...

தமிழனுக்குதான் சூடு... சொரனை... மானம் என்பதே இல்லை என்றாகி விட்டதே... தமிழன் பார்ப்பனர்களின் அடிமையாக வாழ பழகி விட்டானே?

மனித குலத்திற்கே அவமான சின்னம்... அசிங்கமான ரத்த வெறி பிடித்த ஓநாய்... நரேந்திர மோடியை... ஜாதி வெறி பிடித்த ஜெ... சோ... போன்ற காட்டுமிராண்டிகள்... கொண்டாடுவதை பார்த்து கொண்டு... தமிழன் பார்த்து கொண்டு இருப்பது... தமிழனம் சவமாகி விட்டதோ என்றுதான் கேட்க தோன்றுகிறது...

கொலை வெறி பிடித்தலையும்... கேடு கெட்ட... மோடி எனும் அந்த மிருகத்தை விட இழிவான விஷ ஜந்தை... தமிழினத்திற்கு உயிர் இருந்திருந்தால்... தமிழக எல்லைக்கு அப்பால் விரட்டி அடித்திருக்க வேண்டும்...

ஆனால் மத வெறி பிடித்த மோடி எனும் விஷ ஜந்து... பார்ப்பன ஜாதி வெறி பிடித்த காட்டுமிராண்டுகளுடன்... காமராசர் பெயரை கொண்ட அரங்கத்தில்... கொலை வெறி தாண்டவம் ஆடி கொண்டுள்ளது...இந்த விஷ ஜந்துக்களின்... கொலை வெறியாட்டத்திற்கு... மானங்கெட்ட காங்கிரஸ்காரன் மாமா வேலை பார்க்கிறானே?

மானம்... சூடு... சொரனையோடு... உயிரையும் இழந்து விட்ட தமிழினமே...

நீ என்று...

மானம்... சூடு... சொரனையோடு... உயிர்தெழ போகிறாய்?

ரத்தவெறி பிடித்த பிடித்த மோடி... போன்ற பேடிகளையும்... ஜாதி வெறி பிடித்தலையும்... ஜெ... சோ... இல.கணேசன் போன்ற காட்டுமிராண்டிகளையும்... செருப்பால் அடித்து விரட்ட போகிறாய்?

இல்லையென்றால்...

தமிழினமே... உனக்கு உணர்வில்லாமல்... எவ்வளவு காலம் சவமாய் கிடக்க போகிறாய்?

இப்படி சவமாய் கிடந்தால்... ஜெ... சோ... சு.சாமி போன்ற தமிழினதிற்கு எதிரான ஜாதி வெறியர்கள்... தமிழினதிற்கு... சமாதி கட்டிவிடுவார்கள்...

சவமாகி போன... தமிழினமே...

உயித்தெழு... இன உணர்வு கொள்...