Thursday, October 22, 2009

22ஆம் ஆண்டு நினைவஞ்சலி... இந்தியா ஒழிக... தமிழ் வாழக...

1987 அக்டோபர் 21... தீபாவளி... 'ஹிந்தி'யாவின் நவீன் நீரோ மன்னன்... பெண் பொறுக்கி ராஜிவ்... தமிழ் ஈழத்திற்கு அனுப்பிய கற்பழிப்பு படை... யாழ் மருத்துவமனையில் கோர கொலை வெறி தாண்டவம் ஆடி 68 தமிழர்களை கொன்று குவித்த நினைவு நாள்...

தீபாவளி தமிழர்களுக்கு கருப்பு தினம்...

அன்று தீபாவளி... தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள். இந்தியா தன் இரத்த வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.

அந்த நாட்களில் யாழ்பாணத்தில் மருத்துவமனைகள் இயங்காத காலம். போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம். அப்போது யாழ் அப்பாவி மக்களுக்கு யாழ் மருத்துவமனன மருத்துவர்களும் ஊழியகளும் மருத்துவ சேவை செய்து கொண்டு இருந்தனர், இந்த சேவை அப்பாவி மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவாவது பூத்தி செய்தது.

1987 அக்டோபர் 21 அன்று கோழைதனமாக ராஜிவின் 'ஹிந்தி'ய படைகள் யாழ் மருத்துவமனையில் புகுந்து கோர கொலை வெறி தாண்டவம் ஆடியது, இந்திய படையின் துப்பாக்கிகள் கொண்டு கொண்டு X-Ray அறை, மருத்துவர்களின் ஓய்வு அறை,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகள் என சராமாரியா தாக்குதல் நடத்தி மருத்துவர்கள்,ஊழியர்கள்,நோயளிகள் என தமிழ் உறவுகளை கொன்று குவித்தது...

டாக்டர் C.K.கணேசரட்ணம், டாக்டர். பரிமேல்ழகர், தலைமை செவிலியர் திருமதி.P.வடிவேல், செவிலியர் மங்கையகரசி, உழியர்கள் செல்வரஜா, சீவரட்ணம், வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,துரைராஜா போன்றோர் இந்திய படைகளின் கொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த இந்திய கொலை வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த வெறியாட்டத்தை கண்ட வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

இது நடந்த அடுத்தநாள் அக்டோபர் 22 அன்று மருத்துவமனை ஆய்வுக்கு வந்த தலைமை மருத்துவர் டாக்டர்.சிவபாதசுந்தரம் இந்திய இரத்தக் காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.

'ஹிந்தி'ய காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனை அமரர் அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

மொத்தமாக 68 தமிழ் மக்கள் ராஜிவின் 'ஹ்ந்தி'ய படைகளால் கொல்லப்பட்டனர். இதில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 17 ஊழியர்கள் 55 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.

அப்போதும் தமிழக முதல் அமைச்சர் இந்த காட்டுமிராண்டி தனமான இந்திய தாக்குதலுக்கு மௌன சாட்சியாவே இருந்தார்...

எனது இளமை காலத்தில் நடந்த அந்த தமிழர் கொலை பற்றிய செய்தியை... பிபிசியின் தமிழோசையின் வழியாகவே அறிந்தவன் நான்...

தமிழ் நாட்டு மக்கள்... 1987 அக்டேபர் 22 அன்றும்... சொரானையற்று டெல்லியில் நடந்த இந்தியா ஆஸ்தேலியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாம் சுற்று உலக கோப்பை போட்டியை கண்டு களித்து... மாலையில் இந்திய வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்...

தமிழ் நாட்டு தமிழனுக்கு சொரனை எப்போது வரும் என்றே தெரியவில்லை...

இந்தியா ஒழிக... தமிழ் வாழ்க...

தமிழா இன உணர்வு கொள்...

Friday, October 16, 2009

தீபாவளி.... தமிழனுக்கு இழிவு...

என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னிடம் பேசிய போது...

அண்ணே தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?

இல்லப்பா எங்களுக்கு தீபாவளியெல்லாம் பெரிச எதுவும் இல்லை, இங்கதான் இருப்போம், கொண்டாட என்ன இருக்கு?

ஆமாண்ண எங்களுக்கு தீபாவளி கிடையாது, எங்க பாங்காளி ஒருவர் இறந்து விட்டாராம்.

பாருப்பா என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.
எப்படிண்ணே?

நீ தமிழனா?
ஆமாண்ணே...

அப்போ நீயுதாம்பா அசுரன், அப்ப நாமம் போட்ட கிருஷ்ணன் கொலை பண்ணதா சொல்லப்படும் நரகாசுரன் தமிழன் எல்லாருக்கும் பங்காளி. உங்களயே அசுரன் அரக்கன் என கதை சொல்லி வந்தேறிகள், உங்க ஆளையே கொலை பண்ணிட்டு கொண்டாட சொல்லி இழிவுபடுத்தினா கொண்டாடுவது நல்லாவ இருக்கு.
நமக்கு ரொம்ப வருசமா கொண்டாடி பழக்கம் ஆயிட்டேண்ணே...

இப்படிதாம்பா நம் மீது திணிக்கப்பட்ட இழிவுகளை, சிந்திக்காமலே மகிழ்ச்சியா கொண்டாடிக்கிட்டு இருக்கிறோம்.

அப்போ என்னதான் சொல்றீங்கண்ணே?

தீபாவளி என்பது தமிழினின் மீது திணிக்கப்பட்ட இழிவு, அந்த இழிவை தமிழன் அறிவிழந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டுள்ளான். இழிவால் நம்மை அவமானபடுத்தும் போது எதிர்க்கிறோமோ, அதைவிட இழிவால் நமக்கு மகிழ்ச்சி என ஆட்டிவிக்கும் போது அந்த இழிவான மகிழ்ச்சியை தூக்கி எறிய வேண்டும்.

நீங்க சொல்றது புரியலையேண்ணே...

உங்களுக்கு புரிய வைக்க, இன்னும் எத்தனை பெரியார் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து போராட வேண்டும் தெரியவில்லையப்பா.
தீபாவளி என்பது தமிழனுக்கு இழிவு, சொரனையுள்ள, மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான்...

Sunday, October 11, 2009

இலங்கையில் தமிழர்களின் முகாம் பற்றி எம்.பி.கள் அறிக்கை.

10-10-2009 இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தமிழ் நாடு எம்.பி.கள் குழு அறிக்கை அளித்து விட்டது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமா: ஈழ தமிழர்கள் மீளா துயரில் உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.
...
...
...

டி.ஆர்.பாலு - கனிமொழி: தலைவர் கலைஞரின் செய்தி இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களது அறிக்கை தலைவர் கலைஞரிடம் அளிக்கப்பட்டு விட்டது. முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாகவும், அவர்களை விரைவில் அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்தாவின் செய்தியை தலைவர் கலைஞருக்கு தெரிவித்து விட்டோம். கலைஞர் முயற்சியால் முகாம்களில் வாழும் தமிழர்கள் 1 மாததிற்குள் வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள். தலைவர் கலைஞரின் முயற்சி வெற்றி.

சுதர்சன நாச்சியப்பன் - கே.எஸ்.அழகிரி: அன்னை சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து எங்கள் அறிக்கையை அளிப்போம். கிழக்கு மாநிலத்தில் பிள்ளையான் தலைமையில் ஒரு சிறப்பான அரசு செயல்பட்டு கொண்டுள்ளது, அதே போல் ஒரு சிறப்பான அரசை வடக்கிலும் அமைக்க இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ராகபக்சே, பாதுகாப்பு ஆலோசர் கோத்தபயா, சரத் பொன்சேகா ஆகியோரின் மிக சிறப்பான நடவடிக்கைகளால் இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்தோம். தமிழர்களின் முகாம்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா வழங்குவதாக அறிவித்த 500 கோடியோடு கூடுதலாக 1000 கோடி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது, அதனால் இந்தியா 1000 கோடி வழங்கி இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என பிரதமரையும், அன்னை சோனியா காந்தி அவர்களையும் வலியுறுத்துவோம். தமிழர்களின் முகாம உலக தரத்தில் இருப்பதால், தமிழ் நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை இலங்கை அரசையே பராமரிக்க வேண்டுகோள் விடுக்கப்படும். இலங்கை அரசு மிக சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றி விட்டது. இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி இலங்கை தேசிய ஒருமைபாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். அன்னை சோனியா காந்தி இலங்கை தமிழர்களுக்கும் அன்னையாக இருக்கிறார். இலங்கையில் அனைத்து இனத்தவரும் சகோதர்களாக வாழ இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.

இந்த அறிககைகள் பற்றி


ஜெயலலிதா: இது கருணாநிதியின் கபட நாடகம். இலங்கையில் கனிமொழிக்கு பல கோடிகளில் சொத்துக்கள் வாங்குவதற்காகவே இந்த போலி பயணம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. கருணாநிதி குடும்பத்திற்கு பல கோடிகள் லாபம்.

வைகோ: கருணாநிதியின் இந்த துரோகத்தை தமிழினம் மன்னிக்காது.

தினமலரின் ஊடக விபசாரம்...

நடிகைகள் செய்வது ஒன்றும் தூய தொழில் அல்ல... அவர்கள் அதனை தூய தொழில் என சொல்லி கொள்வதும் இல்லை...

ஆனால் தினமலர் நடிகைகள் விபசாரம் செய்வதாக நடிகைகளை இழிவுபடுத்தி வருகிறது...

ஆனால் நடிகைகள் செய்யும் தொழிலை விட கேடு கெட்ட பத்திரிக்கை விபசாரம் செய்யும் தினமலரை என்ன செய்வது?

நடிகைகள் விபசாரி என எழுதும் தினமலர்...

பல பெண்களுடன் கள்ள உறவு கொண்டு... ஒரு பெண்ணை கள்ள உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக வழக்கு போடப்பட்ட தினமலர் முதலாளி ரமேஷ் ஒரு ஆண் விபசாரி என ஒத்து கொள்ளுமா?

சாரு எனும் மனநோயாளி பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண் விபசாரி என எழுதி கிழிக்குமா?

பல 100 பெண்களுடன் உறவு வைத்திருந்த சங்கராச்சாரி பெரியவா, சின்னவா வை... இந்தியாவின் முன்னணி ஆண் விபசாரிகள் ஏன் எழுத வில்லை...