Saturday, August 29, 2009

வரலாற்று பதிவு - 1

10-08-1983

1980-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தோகுதியில் இருந்து கருணாநிதியும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து அன்பழகனும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

ராஜினாமா
இலங்கை தமிழர் பிரச்சனையில், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ராஜினாமாவை விளக்கி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

(1) இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப் படுகொலை குறித்து, இதுவரையில் இந்திய அரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.

ராணுவம்
(2) இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல், எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு, இலங்கை தமிழர் பிரச்சனையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்கு பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.

(3) ஐ.நா.மன்றத்தின் (செக்யூரிட்டி கவுன்சில்) பாதுகாப்பு சபையில் வலியுறுத்தி, உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தனது அக்கறையற்ற தன்மையின் காரணமாக தவறிவிட்டது.

நரசிம்மராவ்
(4) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது, தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டதோடு, தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கே செல்ல முடியாமல் திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை சிங்களவர் சார்பில் விளக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட அல்லது இந்திய அரசு வலியுறுத்தி அந்த தமிழர் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து இலங்கையின் நிலவரங்களை விவரிக்கின்ற சூழ்நிலையை உருவாக்குதின் மூலம் உண்மை நிலவரங்களை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததாலும், அப்படி ஒரு முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று நமது தமிழ்க அரசு இந்திய அரசை வலியுறுத்தாததும் பெரும் குறையாகும்.

உணவு
5) இலங்கையில் அகதிகளாக உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முறையான கவனிப்பின்றி மேலும் மேலும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகின்ற நிலைமையும் அவர்களுக்கென அனுப்படுகிற உணவு வகைகளோ, ஏனைய மருந்து போன்ற பொருட்களோ அவர்களுக்கு போய்ச்சேராமல் சிங்கள ராணுவத்திற்கு போய் சேருகிறது என்ற கொடுமையை சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மற்ற அமைப்புகளும் சுட்டிகாட்டியும் அந்த பொருட்களும், நிதியும் தமிழர்களுக்கு போய்ச்சேர மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.

கண்டன தீர்மானம்
(6) இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபாலசாமி இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல், இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் இதுவரை தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது.

(7) தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நண்பர் நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்ற செய்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வெளியிடுகிற அளவிற்கு இங்குள்ள மாநில அரசு காவல் துறையும், மத்திய அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிகாட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பிவிட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.

Wednesday, August 19, 2009

ஏ மழையே பொய்த்து போ...



மழைக்கு ஏன் என் இனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு?

நேரத்தில் பெய்யாமல் போய் ஆறுகளை வற்ற விட்டு, தமிழர்களின் வயிறுகளை வாட விடுவதும்

நேரம் கடந்து பெய்து எங்களின் பயிர்களில் புகுந்து வடியாமல் நின்று, தமிழர்களின் வயிற்றில் அடித்து விடுவதும்

மழையான போது தமிழனால் தாங்கி கொள்ள முடிந்தது

சம உரிமை பேசிய சாத்தான்கள் சீனாவும், ரஷ்யாவும் கொடுத்த கொத்து குண்டு மழை அக்னியாய்

பாகிஸ்தான் ஓட்டிகள் என் மக்கள் மீது அடை மழையாய் கக்கி தமிழர்களை கரி கட்டைகளாய்

எரித்த போது பொய்த்து போன மழை

இப்போது

என் இனத்தின் குறுதியினை ஆறாக ஓட விட்டு நந்தி கடலில் கரைத்த போது

உடம்பில் ஓடும் செந்நீரையெல்லாம் கண்ணீராய் கொட்டி விட்ட என் இனத்தை

கல்லில் கம்பி கட்டி வேலிக்குள் அடைத்த பின்னும் பட்டினியே பரிசாக கிடைத்த போதும்

வேலிக்குள் மாட்டிய என் இனத்தை கொத்து கொத்தாக கொல்வதை கண்டு மகிழும்

மலையாளத்தான் போல் மகிழ்ச்சியுடன் மழையாக வந்து என இனத்தை அழிக்கின்றாயோ?

ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...

என் இனத்தின் 2 லட்சம் உயிர்கள் கொன்று குருதியை குடித்த பின்னும் இரத்த வெறி அடங்காத

என் இன எதிரிகளை என்ன செய்வது?

என் இனத்தின் இரத்தத்தை குடித்த மூட்டை பூச்சிகள் இரத்த தானம் செய்ய போகிறது என

பத்திரம் எழுதி கொடுத்த தமிழனின் பிணம் திண்ணி கழுகுகளை என்ன செய்வது?

தமிழனுக்கு சொரனை வந்தால் மூட்டை பூச்சிகள் கோபபடும் என சொல்லி தமிழனுக்காக பொங்கிய

எரிமலை அணைந்து குட்டி சுவரான போது என்ன செய்வது?

ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...

Friday, August 14, 2009

போர் குற்றவாளி - தண்டனைக்குரியவர் - விடுதலை

நாளை 15-08- 2009... இந்தியா என அழைக்கபடும் ஒன்றின் 62வது விடுதலை நாளாம்...

காந்தி-நேரு கூட்டம் விடுதலை பத்திரம் வாங்கும் போது... விடுதலைக்கு வீரத்துடன் போராடிய சுபாஷ் சந்திர போஸை... வெள்ளையர்கள் ஏகாதிபத்தியதிற்கு எதிராக சண்டையிட்ட போர் குற்றவாளி... இவர் இந்தியாவிற்குள் வந்தால் வெள்ளை ஏகாதிபத்தியதித்கு பிடித்து கொடுப்பதாக பத்திரம் எழுதிகொடுத்துள்ளனர்... இன்றும் நேதாஜி இந்தியாற்கு போர் குற்றவாளிதான்...

ஐ.சி.எஸ். பதவி தூக்கி எறிந்து விட்டு... போராட்டதிற்கு வந்த சுபாஷ்... 1940களின் தொடக்கத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தலில் காந்தியால் நிறுத்தப்பட்ட பட்டாபியை தோற்கடித்து காங்கிரஸ் தலைவரான போது... பட்டாபியின் தோல்வி எனது தோல்வி என காந்தி சொன்ன காரணத்தால்... காங்கிரஸை விட்டு விலகி... ஜப்பான்... மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு சென்று... 1942 ஆகஸ்ட் 7ஆம் தேதி... இந்திய தேசிய படையை உருவாக்கினார்... இவரது படையில் போராட்டங்களே... இந்திய விடுதலைக்கு ஆதரவாக... வெள்ளை அரசுக்கு கொடுக்கப்பட்ட பேரிடி... ஆனால் விடுதலையின் போது சுபாஷ் போது குற்றவாளி... இதுதான் இழிவாக இந்தியா வெற்ற விடுதலை...

இந்த ஆண்டு இந்தியர்கள்... மிக மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்களோ?

இந்த ஆண்டு இந்தியாவின் ஆதிக்க வெறிக்கு இரையானவர்கள்... சுமார் 1 1/2 லட்சம் ஈழ தமிழர்கள்... தமிழினத்தின் 1 1/2 லட்சம் உயிர்களை சிங்கள காட்டுமிராண்டிகளுன் சேர்ந்து கொன்று ஒழித்து விட்டு 'ஹிந்தி'யர்கள்... விடுதலை நாளை மகிழ்ச்சியாக கொண்டாட்டும்... இப்படிப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடதானா தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி... முதல் முதலில் 1969இல் முதல் அமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை... 'ஹிந்தி'ய அரசிடம் இருந்து பிச்சையாக பெற்றாரோ?

தமிழர்கள் கொன்றொழித்த மகிழ்ச்சியில் எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேனனும், பிரனாப் முகர்ஜியும், சோனியாவும், ராகுலும், மன்மோகனும், ஏ.கே.அந்தோனியும், இந்து ராமும், சோனா சாமியும், சூனா சாமியும், ஜெவும்... மகிழ்ச்சியாக கொண்டாட்டும்...

'ஹிந்தி'யா போட்ட பிச்சையை கொண்டு... கருணாநிதியும், ஸ்டாலினும், தயாநிதியும் மகிழ்ந்து விட்டு போகட்டும்...

இந்த மானகெட்ட நாட்டில்... உண்மையாய்... உறுதியாய் போராடிய சுபாஷே குற்றவாளியான போது... இந்த கேடு கெட்ட விடுதலை நாள் என்பது போராளிகளுக்கு அவமானம்...

கொலைகாரர்களும்... பிச்சைகாரர்களும் வேண்டுமானால்... கேவலமான விடுதலை நாளை கொண்டாடி விட்டு போகட்டும்...

மானமுள்ள தமிழர்களே... 'ஹிந்தி'யாவின் கொடியை காறி உமிழ்ந்து... காலால் மிதித்து எறியுங்கள்... என்று தமிழனுக்கென்று... அவனது சொந்த மண் உரிமையாகிறதோ... அன்றுதான் தமிழனுக்கு விடுதலை நாள்...