Tuesday, August 14, 2007

வெட்கம் கெட்ட 'சஷ்டியப்தபூர்த்தி' - விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...

இந்திய சுதந்திரத் தாய்க்கு இன்று 'சஷ்டியப்தபூர்த்தி' அதாவது அறுபதாம் கல்யாணம்!!!! இந்தியத் தந்தை....? ஒவ்வொரு இந்தியக்குடிமகனும்தான்.

இப்படி ஒரு பதிவை பார்க்க நேர்ந்ததது... என்ன கொடுமை சரவணன்...
இவர்கள் வாழ்த்து சொல்வதற்கு ஒரு விவஸ்த்தையே கிடையாது போல் உள்ளது...


இந்திய தாய்க்கு கல்யாணமாம்... அதுவும் 100 கோடி பேர் உடனாம்... இப்படிதான் ஏதாவது தொடர்பில்லாமல் எழுதுவார்களோ?

இந்த நாட்டை தாய் என்று சொல்பவர்கள்... நாட்டு தந்தை என அழைக்கப் பட்ட மகாத்மா காந்தியை 30-01- 1948 இலேயே மதவெறி பிடித்த சாவர்க்கர்... கோட்சே கூட்டம் கொன்று... இந்திய தாயை விதவை ஆக்கி விட்டார்களே? அப்புறம் என்ன தாய்... கல்யாணம் என வெட்கம் இல்லாமல் எழுதுவது...

எப்படி இருந்தாலும்

இந்தியாவின் 60வது விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...

இந்த நாளில் விடுதலைக்காக உரிரையும்... உடமைகளை நாட்டுக்கு அர்பணித்த தியாகிகள் நன்றியோடு நினைக்க பட வேண்டியவர்கள்...

No comments: